search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளிகள் பட்டியல்"

    • சென்னை, டெல்லி, லக்னோ தலா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
    • குஜராத் அணி ஐந்து வெற்றிகள் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சன்ரைசர்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. லக்னோ 6-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. ஆர்சிபி டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு அணியிடம் பிளேஆஃப் சுற்றை வாய்ப்பை இழந்து விடும். குஜராத் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் மோத உள்ளது. இதற்கும் அதே நிலைதான். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் வாய்ப்பில் நீடிக்க முடியும். டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி உள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்கும். இந்த மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    • பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி
    • இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற அணிகள் 4 வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஏறக்குறைய கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன.

    நேற்று பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிகளில் வங்காளதேசம் தோல்வியடைந்தது. இதன்மூலம் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி வருகிற 6-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவால் வங்காளதேசத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தோல்வியடைந்தால், அந்த அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. 4-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 8-ந்தேதி நெதர்லாந்தையும், 11-ந்தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு வெற்றிகள் பெற்றிருக்கும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வருகிற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் முடிவைப் பொறுத்து ஒருவேளை அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். அது மிகவும் கடினம்.

    இன்று தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஏற்கனவே ஐந்து வெற்றிகளை பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஒருவேளை தோல்வியடைந்தால் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்தியா 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் பெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்ற 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் தலா இரண்டு வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இலங்கை 7-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    ×