search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குஜராத்- சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு புள்ளிகள் பட்டியல் ஒரு பார்வை
    X

    குஜராத்- சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு புள்ளிகள் பட்டியல் ஒரு பார்வை

    • சென்னை, டெல்லி, லக்னோ தலா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
    • குஜராத் அணி ஐந்து வெற்றிகள் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சன்ரைசர்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. லக்னோ 6-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. ஆர்சிபி டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு அணியிடம் பிளேஆஃப் சுற்றை வாய்ப்பை இழந்து விடும். குஜராத் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் மோத உள்ளது. இதற்கும் அதே நிலைதான். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் வாய்ப்பில் நீடிக்க முடியும். டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி உள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்கும். இந்த மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    Next Story
    ×