search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியரை சோதனை சாவடி"

    • இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் ‘நிபா’ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலத்தில் 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு அதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற அச்சமும் அங்கு நிலவி வருகிறது.

    இதனால் தமிழகத்தில் கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவிடாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடியில் நிறுத்தி அதில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக புளியரை சோதனை சாவடியில் ஒரு சுகாதார ஆய்வாளர், 2 உதவியாளர்கள் என 3 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களை பரிசோதனை செய்யும்போது ஏற்படும் வாக்குவாதங்களை தடுக்க பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    மோட்டார் சைக்கிள், கார் என அனைத்து விதமான வாகனங்களிலும் வருபவர்களை நிறுத்தி உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் கொரோனா பரிசோதனை போலவே மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் புளியரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களிடம் முகவரி பெறப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றனர்.

    • சோதனை சாவடி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவகிரி அருகே குமாரபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 48), களப்பாகுளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், விற்ற பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் காய்கறி, வைக்கோல், கனிமவளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றன. இதனை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்(வயது 55) என்பவர் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரி டிரைவர் ரூ.100 லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஜேம்ஸ் கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ்காரர் ஒருவருக்கு போன் செய்து, வைக்கோல் லாரியின் பதிவெண்ணை சொல்லி, அந்த லாரிக்கு அதிக பாரம் ஏற்றியதாக வழக்கு போட்டு அபராதம் விதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவங்களை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சை நேற்று இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். இந்நிலையில் இன்று ஜேம்சை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறுகையில், வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் அவர் லஞ்சம் கேட்பது தொடர்பாக வீடியோ வந்துள்ளது. அதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளேன். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

    சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். இவர் தற்போது ஆய்குடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    • தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள்.
    • விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகிறது.

    ரேஷன் அரிசி கடத்தல்

    அத்தியாவசிய பொருட்களும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இன்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கைது

    உடனடியாக லாரியை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் கொல்லோடு தாலுகா பனையங்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 44) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்ல இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டை களை குடிமைபொருள் வழங்கல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×