search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் தற்கொலை"

    திண்டுக்கல்லில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் ரோடு லைன் தெருவை சேர்ந்த ஆண்டியப்பன்- மஞ்சுளா தம்பதி மகள் நந்தினி. (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் பூபேந்திரன். ஆர்.வி.எஸ். கல்லூரியில் எம்..சி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் நந்தினிக்கும் காதல் ஏற்பட்டது. எனவே பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 பேரும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்தனர்.

    கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை.

    எனவே ஒரு மனமாற்றத்துக்காக நந்தினி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று லைன் தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு நந்தினி வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நந்தினியின் உறவினர் முற்றுகையிட்டு பூபேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மங்கலத்தில் புதுப்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், கணவர் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    கணவர் குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச் சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி புதுப்பெண் சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

    ×