search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையம்"

    • இருட்டில் தவிக்கும் பயணிகள்
    • காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஎஎ8520

    வேலூர்,

    வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும்.

    மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் ஒரு நுழைவு வாயில் உள்ளது.மின் சிக்கனத்திற்காக பஸ் நிலையம் முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.

    கிழக்கு பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மின்விளக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ஒரு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    செல்லியம்மன் கோவில் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோவிலுக்கு பின்புறம் பஸ் நிலைய வளாகத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது

    காட்பாடியில் இருந்து ரெயில்களில் வரும் பொது மக்கள் இரவு நேரங்களில் புதிய இறங்கி செல்லியம்மன் கோவில் முன்பு பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க செல்லியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மையப்பகுதியில் 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 50 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது இங்கு மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகர பஸ்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஆண்டாள் கோவில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், பிளவக்கல் அணை, செண்பக தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் பஸ் நுழைவு கட்டணம், கடைகளின் வாடகை என மாதம் பல லட்சம் வருவாய் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ள தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம், திருக்கல்யாணம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாமல் விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை, மார்க்கெட், கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட், வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பஸ்கள் வரும் வழி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பஸ் நிலையம் வந்து, பின் திருவண்ணாமலை சாலை வழியாக ராமகிருஷ்ணா புரம் சென்று மீண்டும் சர்ச் வழியாக ராஜபாளையம் செல்கிறது. இதனால் நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலை, ராமகிருஷ்ணாபுரம், பென்னிங்கடன் மார்க்கெட், அரசு மருத்துவமனை, சின்னக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பஸ் நிலையம் கட்டப்படவில்லை. தற்போது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 4வழிச்சாலை அருகே போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகராட்சிகூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    கமிஷனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்பு தலுக்காக வைக்கப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில் பஸ் நிலையம் விரிவாக்க பணி களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக காய்கறி மார்க்கெட்டை நிரந்தரமாக நகராட்சி அலுவலகம் அருகில் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் 21 பேர், நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இதுகுறித்து கவுன்சிலர்கள் முன்பே தெரிவித்து இருக்கலாம். தற்போது பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் எப்படி மாற்ற முடியும் என்று கூறினார்.

    அப்போது தி.மு.க., கவுன்சிலர் வேல்ராஜ், பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு முன்பு கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டீர்களா? பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்படுவதை மற்றவர்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று கூறினார்.

    பஸ் நிலையம் இடமாற்றம் செய்தால் தான் நகர வளர்ச்சி இருக்கும் என்பது இல்லை. மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.

    அப்போது நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று 21 கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 21 கவுன்சிலர்களின் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 85 சதவீத பணிகள் நிறைவு.
    • மணல் கடத்தலை தடுக்க 12 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு.

    வேலூர்:

    வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 அல்லது 21-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.

    இதன் காரணமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்தில் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் பயணிகளின் இருக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    மீதமுள்ள பணிகள் வரும் ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது.

    இந்த மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் கடத்திச் செல்வதாக புகார்கள் வருகின்றன.

    மணல் திருட்டை தடுக்க வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

    ×