search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாண்டர்"

    • தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
    • யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.

    புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு பிளாண்டர் கூறினார்.

    ×