search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெட் சமையல்"

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 5

    கேரட் - 1

    கோஸ் - 50 கிராம்

    குடைமிளகாய் - 1

    சீஸ் - 1 கப் துருவியது

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 4

    கேரட் - 1

    கோஸ் - 1/2 கப்

    குடை மிளகாய் - 1

    சீஸ் - 1 கப்

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சீஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கோஸ், குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.

    • காலையில் ஆரோக்கியமான உணவிற்கு இந்த சாண்விச் சாப்பிடலாம்.
    • இந்த சாண்விச்சை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    முட்டை - 2

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    பிரெட் - 2

    சீஸ் ஸ்லைஸ் - 2

    சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பிரெட்டின் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல் சில்லி ஃபிளேக்ஸ் தூவி மற்றொரு பிரெட்டால் மூடவும்.

    தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பிரெட்டை வைத்து ஒரு புறம் ரோஸ்ட் ஆனதும் மறுபுறம் திருப்பி போட்டு சுற்றி வெண்ணெய் விட்டு இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்த பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி முட்டை சற்று வெந்ததும் பிரெட்டை நடுவில் வைத்து முட்டையை அதன் மேல் மடித்து போட்டு பின்னர் திருப்பிபோட்டு வேக வைக்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் தவாவில் இருந்து இறக்கி இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி.

    • சாண்ட்விச் பலரது பசியைப் போக்கும் நல்ல ஸ்நாக்ஸாக உள்ளது.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 6 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    டார்க் சாக்லேட் துண்டுகளை துருவிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துருவலை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    இதேப் போன்று மற்ற 3 பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, கரண்டியால் லேசாக அழுத்திவிட வேண்டும். பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்தால் தான் உள்ளே இருக்கும் சாக்லேட் உருகி பிரெட் முழுவதும் படரும்.

    இதேப் போல் மீதமுள்ள சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • இன்று உருளைக்கிழங்கு பிரட் சேர்த்து வடை செய்யலாம்.
    • இந்த வடை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 2

    பிரெட் துண்டுகள் - 10

    வறுத்த ரவை - அரை கப்

    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 2

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    • இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6,

    உளுத்தம் பருப்பு - 100 கிராம்,

    வெங்காயம் - 2,

    இஞ்சி - சிறு துண்டு,

    பச்சை மிளகாய் - 1,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.

    • 'ஷாய் துக்கடா' முகலாய மன்னர்களின் விருப்பமான இனிப்பு வகையாகும்.
    • ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த இனிப்பு பிரபலம்.
    • இந்த இனிப்பு ரம்ஜான், ஹோலி, தீபாவளி நாட்களில் சுவைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    பால் - 1 லிட்டர்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

    ரொட்டித் துண்டுகள் - 6

    நெய் - தேவைக்கேற்ப

    பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை தண்ணீர் - தேவையான அளவு

    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கி முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் நன்றாக சூடுபடுத்தவும்.

    சிறிய கிண்ணத்தில் சிறிது பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைக்கவும்.

    அடுப்பில் இருக்கும் பால் பாதி அளவாக சுண்டியதும், அதில் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும்.

    பின்பு அதில் நெய்யில் வறுத்த பாதாம் பிஸ்தா, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

    வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு அவற்றை கொதிக்க வைத்த சர்க்கரை நீரில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.

    ஒரு தட்டில் பால் கலவையை ஊற்றி, அதன் மீது ரொட்டித் துண்டுகளை வைத்து, அவற்றின் மீது மீண்டும் பால் கலவையை ஊற்றவும்.

    அதன் மேல் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்சை தூவி பரிமாறவும்.

    ஷாய் துக்கடாவை சூடாகவும், குளிர்ச்சிபடுத்தியும் சாப்பிடலாம்.

    • இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
    • இந்த சப்பாத்தி செய்வதும் எளிது, சுவையும் அலாதியானது.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10,

    மைதா மாவு - 100 கிராம்,

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    பால் - 100 மில்லி,

    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

    நெய் - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.

    இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

    இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

    பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

    ×