search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் ஸ்காட் மாரிசன்"

    ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். #AustralianElections #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
    கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது பிரதமருக்கான  போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், பாராளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.



    இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது தெரியவரும். பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.

    “அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. #AustralianElections #ScottMorrison

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று புத்தாண்டு விருந்து அளித்தார். #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    சிட்னி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.



    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.

    இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    ×