என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிணைக்கைதிகள்"
- இஸ்ரேலியர்களுடன் வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து வருகிறார்கள்.
- தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டினரை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி விடுவிப்பு.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை ரிலீஸ் செய்து வருகிறார்கள். நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள் என்ற அடிப்படையில் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர்.
அதேவேளையில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டினரையும் விடுவித்து வருகின்றனர். அந்த வகையில நேற்று 3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமியாகும். அவரது பெயர் அபிகெய்ல் ஈடன். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அப்போது பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார் அபிகெய்ல் ஈடன். பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "கடவுளுக்கு நன்றி, அந்த சிறுமி வீட்டில் இருக்கிறார். அவளை கட்டிப்பிடித்து சந்தோகத்தை வெளிப்படுத்த அங்கே இருக்க விரும்புகிறேன். அவள் இஸ்ரேலில் பத்திரமாக இருக்கிறாள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு இன்னும் அதிகமான பிணைக்கைதிகளை விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பின்னர், அமெரிக்காவில் உள்ள அந்த சிறுமியின் குடும்பத்துடன் பேசியதாகவும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடமும் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை மத்தியஸ்தரராக செயல்பட்டு வரும் கத்தார் மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு இஸ்ரேலியர் விடுதலைக்கும் 3 பாலஸ்தீனர்களை ஜெயிலில் இருந்து விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது. அதன்படி 39 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 117 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்துள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்கவும், கசாவிற்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.
- இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது.
- காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது.
காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம்.
இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும்.
கூடுதல் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27-ந்தேதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது" என்றார்.
- இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை.
- பிணைக்கைதிகள் 25 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளதாக அறிவிப்பு.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து வெளிநாட்டினர் உள்பட 250-க்கு மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போர் நிறுத்தம் தொடங்கியது.
இதில் முதல் கட்டமாக ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருந்த 13 இஸ்ரேலியர்கள் மற்றும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை ஹமாஸ் அமைப்பினர், செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு சென்றடைந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் இணைவார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சிறைக்காவலில் இருந்து 24 பெண்கள் உள்பட 39 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது. அவர்கள் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தப்படி 2-வது நாளாக இன்று மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
காசாவில் இருந்து 2-வது கட்டமாக விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு அளித்து உள்ளது. அந்த பட்டியலை இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இன்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நேற்றைப்போலவே இன்றும் 20-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 196 டிரக்குகளில் உணவு பொருட்கள், தண்ணீர், மருத்துவ பொருட்கள் ஆகியவை ராபா எல்லை வழியாக காசாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.
- பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது
- இந்த நடவடிக்கையால் காசா மீதான தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரேல் பதில்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
அதன்பின் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ள கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், மறுபக்கம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளில் தாய் மற்றும் மகள் என இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது.
இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை அதன்அடிப்படையில் விடுவிக்க தயாராக இருந்தோம். ஆனால், இஸ்ரேல் அவர்களை பெற மறுத்துவிட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஹமாஸின் பொய் பிரசாரத்தை நாங்கள் குறிப்பிடமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன மக்களை மீட்க அனைத்து வழிகளிலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
- பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தாக்குதலை தாமதப்படுத்த ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது
- ஜோ பைடன் கேள்வியை சரியாக கேட்கவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம்
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் பலரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
பிணைக்கைதிகளின் நிலைமை என்ன? என்ற நிலையில், நேற்று பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது.
இதற்கிடையே, காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதலை தொடரலாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேரை விடுவித்த நிலையில், மேலும் பலரை விடுவிக்கும்வரை தாக்குதலை சற்று தாமதப்படுத்துங்கள் என இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
இதனால் காசாவில குண்டுமழை சத்தம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோ பைடன் அவ்வாறு கேட்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ''ஜோ பைடன் முழு கேள்வியையும் கேட்கவில்லை. மேலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பார்க்கிறீர்களா? என்பதுபோல்தான் அவருக்கு கேட்டது. அவர் எதுகுறித்தும் பதில் சொல்லவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிருபர் ஒருவர், காசா மீதான தாக்குதலை குறைக்க இஸ்ரேலிடம் வலியுறுத்துவீர்களா? என்று கேட்க, ஜோ பைடன் ஆம் என்று பதில் அளித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- 7-ந்தேதி தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது ஹமாஸ்
- அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதோடு பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
மற்றவர்கள் நிலைமை என்ன? எனத் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது பெண் எனத் தெரியவந்துள்ளது. இருவரிடமும் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ரிலீஸ் செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை ரிலீஸ் செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்