search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொல்லை வழக்கு"

    • ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

    பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்னதாக, பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் விலக்கு அளிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    விசாரணை நீதிமன்றத்தில் சரணமடையுமாறும், அதன்பிறகு தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க கோரலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    • எனது மகளுக்கு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் கணவர் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும்போது இதே பகுதியை சேர்ந்தவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி, மன உளைச்சலில் என் மகள் இருந்தார். இதற்கிடையே எங்கள் வீட்டு செல்போனுக்கு தொடர்ந்து அருவெறுக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பி ஜெயகுமார் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் முறையிட்டேன். அதன்பின் ஒரு மாதம் கழித்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயகுமார் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆஜர் ஆனார்கள்.
    • இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாது காப்பி ற்காக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு டிஜிபி இதில் ஆஜராகவில்லை. 

    ×