search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலகணபதி"

    • பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி காக்களுர், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு, மப்பேடு, கூவம், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது காக்களுர் பகுதியில் உள்ள டீக்கடையில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.

    வளா்ச்சி திட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் தொகுதி மக்களோடு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வேட்பாளருடன் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல் தலைவர் ராஜேந்திரன், தரவு மேலாண்மை மாநில செயலாளர் ரகு, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன், காக்களூர் மோகன், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் தியாகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பலராமன், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    ×