search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் நியூசிலாந்து தொடர்"

    • பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகா சல்மான் 45 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேவன் கான்வே, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கான்வே 52 ரன்னிலும், வில்லியம்சன் 53 ரன்னிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியூசிலாந்து திணறியது.

    கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் போராடினார். அவர் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கும், தொடர் நாயகன் விருது டேவன் கான்வேக்கு வழங்கப்பட்டது.

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.
    • 43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் சுருண்டது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவன் கான்வே 101 ரன்கள் குவித்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர் பகார் ஜமான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    3வது வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த அவர் தொடர்ந்து முன்னேறினார். ஆனால், முறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. பாபர் ஆசம் 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். தேவன் கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 13ம் தேதி நடக்கிறது.  

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 255 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 5-0 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. பிரேஸ்வெல் 43 ரன்னிலும், டாம் லதாம் 42 ரன்னிலும், பிலிப்ஸ் 37 ரன்னிலும், டேரில் மிட்செல் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 5 விக்கெட்டும், உசாமா மிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 56 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்னும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    5 விக்கெட் வீழ்த்திய நசீம் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.
    • பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கேப்டன் பாபர் ஆசம் 27 ரன்களும், ஷான் மசூத் 35 ரன்களும் அடித்தனர். சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.

    சவுத் ஷகீல் 146 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அகா சல்மான் 30 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் அகமது சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் அகமது 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287 ஆக இருந்தது. ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.

    ஆனால், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இரண்டாவது போட்டியில் சதம் அடித்த சர்பராஸ் அகமது, பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

    • நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 277 ரன்னில் டிக்ளேர் செய்தது.
    • பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னிலும், டாம் பிளெண்டல் 51 ரன்னிலும் அவுட்டாகினர். மாட் ஹென்றி 68 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாம் உல் ஹக் 83 ரன்னும், சர்ப்ராஸ் கான் 78 ரன்னும் எடுத்தார். பொறுப்புடன் ஆடிய ஷகீல் சதமடித்தார். அவர் 125 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. டாம் பிளெண்டல் 74 ரன்னும், டாம் லாதம் 62 ரன்னும் எடுத்து வெளியேறினார். பிரேஸ்வெல் 74 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் அப்துல்லா ஷபீக் , மிர் ஹம்சா டக் அவுட்டாகினர். 4-வது நாள் முடிவில் பாகிஸ்தான் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    இறுதி நாளான இன்று பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் தேவை. நியூசிலாந்து வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவை.

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது.
    • அபாரமாக ஆடிய சாத் ஷகீல் 124 ரன்களுடன் களத்தில் உள்ளார்

    கராச்சி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 20 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 74 ரன்னுடனும், சாத் ஷகீல் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாத் ஷகீல், சர்ப்ராஸ் அகமது இணைந்து நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். சர்ப்ராஸ் அகமது 78 ரன்களில் வெளியேறினார். நிலைத்து ஆடிய சாத் ஷகீல் சதம் அடித்து அசத்தினார். இடதுகை ஆட்டக்காரரான அவருக்கு இது முதல் சதம் ஆகும். மறுபுறம் ஆகா சல்மான் 41 ரன்களுக்கும் , ஹசன் அலி 4 ரன்களுக்கும், நசீம் ஷா 4 ரன்களுக்கும் வெளியேறினர்.

    இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை விட 42 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷகீல் 124 ரன்களுடனும், அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 3 விக்கெட், இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது.
    • 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரைசதம் அடித்து 51 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் , நசீம் ஷா, ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் 20 ரன்களுக்கும், பாபர் அசாம் 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 74ரன்களும், சவுத் ஷகீல் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.
    • இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.

    இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதற்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.

    இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • டாம் லாதம் - கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    கராச்சி:

    பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டாம் லாதம் - கான்வே ஜோடி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். அணியில் எண்ணிக்கை 134 ரன்கள் இருந்த போது லாதம் அவுட் ஆனார்.

    இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் 26 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் சேர்த்தனர்.
    • தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

    இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 2) கராச்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் எடுத்தனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர்.
    • நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார்.

    கராச்சி:

    பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
    • நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.

    இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.

    இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.

    ×