search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் தேர்தல்"

    பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், நாளை இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது. 

    பாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

    இதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது. 

    ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

    பாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
    பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக உள்ள இம்ரான்கானுக்கு புதிய தலைவலியாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    ஒரு வழியாக கூட்டணி அமைந்த நிலையில், வரும் 11-ம் தேதி இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.



    பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 137 இடங்கள் அவரின் வசம் இருப்பதால் அதில் சிக்கல் இருக்காது என கூறப்பட்டது. இந்நிலையில், தோல்வியடைந்த இரு முக்கிய கட்சிகளும் தற்போது கைகோர்த்துக்கொண்டு இம்ரானுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

    பாக். முஸ்லிம் லீக் மற்றும் பாக். மக்கள் கட்சி வசம் 107 இடங்கள் தற்போது உள்ளன. போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கூடுதலாக 30 இடங்கள் தேவை என்பதால், இந்த இடத்திலும் சிறிய கட்சிகளின் தயவை இரு கட்சிகளும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சாத்தியமாகாது என உறுதியாக கூற முடியும் என்றாலும், இம்ரான்கான் பக்கம் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் பக்கம் கைகோர்க்கும் நிகழ்வும் நடக்கலாம். இதனால், வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை இம்ரான்கானுக்கு தூக்கம் இருக்காது.



    சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்தலாம் என்ற திட்டமும் இம்ரான்கானின் மனதில் உள்ளது. எனினும், தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    பிரதமராக இம்ரான்கான் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடலாம். இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது போக போக தெரியவரும்.

    ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் என்பது யாரும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால் அந்நாட்டு அரசியல் சூழல் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து கடந்த புதன் கிழமை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. 

    வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எனினும், 50 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் ஓட்டு எண்ணப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டின. 


    உலகக்கோப்பை வென்ற கேப்டனாக இம்ரான்கான்

    இதற்கிடையே நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது வரை 95 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இம்ரான்கானின் பிடிஐ கட்சி 115 இடங்களிலும், பாக். முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களிலும், பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அறிவித்தாலும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக பாடுபட தயார் என பாக். முஸ்லிம் லீக் கட்சி கூறியுள்ளது. இதனால், இம்ரான்கான் பிரதமராவதற்கு எந்த பிரச்சனையும் இல்லாத நிலை உள்ளது.

    எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகள் தேவை. ஆனால், இம்ரான்கானின் வசம் தற்போது 115 தொகுதிகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முழுவதும் முடிந்தாலும், அவருக்கு இன்னும் கூடுதலாக 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனினும், 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடனான பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டு வருகிறார். சுமார் 15 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் வளைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசி வருகிறார்.


    கூட்டணி பேச்சுவார்த்தையில் இம்ரான்கான்

    தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்த நம்பிக்கையில் தான் மந்திரிசபையில் யார் யாருக்கு இடம், அரசின் முக்கிய பதவிகள் யாருக்கு? போன்றவை குறித்தும் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் விவாதித்து வருகிறார். பிரதமராக அவர் தனது இன்னிங்சை தொடங்கியதும் பல சவால்கள் காத்திருக்கின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டியதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல், எல்லை பாதுகாப்பு, பொருளாதார சரிவு ஆகிய பல பிரச்சனைகளை அவர் உடனே சரிசெய்ய வேண்டிய சூழல் அவசியமாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு மாறாக பஞ்சாப் மாகாண சபை தேர்தலில் இம்ரான்கான் கட்சியை விட நவாஸ் ஷரீப் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. எனினும், ஷரீப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை மடக்கி அங்கும் ஆட்சியமைக்க இம்ரான்கான் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PakistanElection #ElectionPakistan2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  

    குறிப்பாக இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸியை விட சுமார் 800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும். 
    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் குண்டுவெடிப்பு, வன்முறை பரபரப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு 6 மணியளவில் முடிந்தது. #PakistanElections2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபையில் உள்ள 270 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மேலும், மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. அரசியல் பரபரப்பு, ராணுவ ஆட்சி அச்சுறுத்தல், பயங்கரவாதிகளின் தாக்குதல் என பல நிகழ்வுகளுக்கு இடையே இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    பாராளுமன்ற இடங்களுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

    பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், குவெட்டா பகுதியில் வாக்குசாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 31 பேர் பலியாகினர். மேலும், சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.



    6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. 24 மணிநேரத்துக்குள் முழு வெற்றி நிலவரமும் தெரிய வரும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.
    பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். #PakistanBlast
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இதனால் நாடுமுழுதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவேட்டாவில் வாக்குச்சாவடி அருகே திடீர் தற்கொலைப்படை தாக்குதல் நகழ்த்தப்பட்டது. இதில், மூன்று போலீஸ்காரர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    உடலில் குண்டுடன் வந்த பயங்கரவாதி வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த முயற்சி செய்தான். ஆனால், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பயங்கரவாதியை தடுத்து நிறுத்தும்போது அவன் குண்டை வெடிக்க செய்ததாக போலீஸ் டிஐஜி அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    மேலும், தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை  வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தினால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. #PakistanBlast
    மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×