search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிஐ"

    • இம்ரான் கானின் வேட்பு மனு, தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
    • நேர்மையற்றவர் எனும் தீர்ப்பால் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறார் என்றது ஆணையம்

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.

    இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

    ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார். இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிடிஐ கட்சியின் 90 சதவீத தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், நாளை இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது. 

    பாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

    இதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது. 

    ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

    பாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
    பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக உள்ள இம்ரான்கானுக்கு புதிய தலைவலியாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    ஒரு வழியாக கூட்டணி அமைந்த நிலையில், வரும் 11-ம் தேதி இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.



    பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 137 இடங்கள் அவரின் வசம் இருப்பதால் அதில் சிக்கல் இருக்காது என கூறப்பட்டது. இந்நிலையில், தோல்வியடைந்த இரு முக்கிய கட்சிகளும் தற்போது கைகோர்த்துக்கொண்டு இம்ரானுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

    பாக். முஸ்லிம் லீக் மற்றும் பாக். மக்கள் கட்சி வசம் 107 இடங்கள் தற்போது உள்ளன. போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கூடுதலாக 30 இடங்கள் தேவை என்பதால், இந்த இடத்திலும் சிறிய கட்சிகளின் தயவை இரு கட்சிகளும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சாத்தியமாகாது என உறுதியாக கூற முடியும் என்றாலும், இம்ரான்கான் பக்கம் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் பக்கம் கைகோர்க்கும் நிகழ்வும் நடக்கலாம். இதனால், வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை இம்ரான்கானுக்கு தூக்கம் இருக்காது.



    சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்தலாம் என்ற திட்டமும் இம்ரான்கானின் மனதில் உள்ளது. எனினும், தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    பிரதமராக இம்ரான்கான் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடலாம். இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது போக போக தெரியவரும்.

    ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் என்பது யாரும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால் அந்நாட்டு அரசியல் சூழல் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து கடந்த புதன் கிழமை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. 

    வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எனினும், 50 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் ஓட்டு எண்ணப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டின. 


    உலகக்கோப்பை வென்ற கேப்டனாக இம்ரான்கான்

    இதற்கிடையே நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது வரை 95 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இம்ரான்கானின் பிடிஐ கட்சி 115 இடங்களிலும், பாக். முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களிலும், பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அறிவித்தாலும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக பாடுபட தயார் என பாக். முஸ்லிம் லீக் கட்சி கூறியுள்ளது. இதனால், இம்ரான்கான் பிரதமராவதற்கு எந்த பிரச்சனையும் இல்லாத நிலை உள்ளது.

    எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகள் தேவை. ஆனால், இம்ரான்கானின் வசம் தற்போது 115 தொகுதிகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முழுவதும் முடிந்தாலும், அவருக்கு இன்னும் கூடுதலாக 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனினும், 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடனான பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டு வருகிறார். சுமார் 15 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் வளைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசி வருகிறார்.


    கூட்டணி பேச்சுவார்த்தையில் இம்ரான்கான்

    தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்த நம்பிக்கையில் தான் மந்திரிசபையில் யார் யாருக்கு இடம், அரசின் முக்கிய பதவிகள் யாருக்கு? போன்றவை குறித்தும் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் விவாதித்து வருகிறார். பிரதமராக அவர் தனது இன்னிங்சை தொடங்கியதும் பல சவால்கள் காத்திருக்கின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டியதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல், எல்லை பாதுகாப்பு, பொருளாதார சரிவு ஆகிய பல பிரச்சனைகளை அவர் உடனே சரிசெய்ய வேண்டிய சூழல் அவசியமாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு மாறாக பஞ்சாப் மாகாண சபை தேர்தலில் இம்ரான்கான் கட்சியை விட நவாஸ் ஷரீப் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. எனினும், ஷரீப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை மடக்கி அங்கும் ஆட்சியமைக்க இம்ரான்கான் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
    ×