search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதுபார்ப்பு பணிகள்"

    • நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரி ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, வெள்ளை கிணறு (மாநகராட்சி பருதி) ஆகிய இடங்களில் சமத்துவப்புரங்கள் உள்ளன.

    சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 321 வீடுகள் ரூ.160 கோடி மதிப்பீட்டில், பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

    இதில் ரூ.152 கோடி மதிப்பீட்டில் 305 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், மதுக்கரை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.9லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை எஸ்.எஸ் குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமத்துவபுரங்களில் குடிநீர் வழங்கல் பணிகள், சாலைபணிகள், தெருவிளக்கு பணிகள், விளையாட்டு மைதானம், சமுதாய நலக்கூடங்கள், நூலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைகடைகள், தந்தை பெரியார் சிலைகள், சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.92.93 லட்சம் மதிப்பீட்டில் 43 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளில் 37 பணிகள் ரூ.27.18 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது

    மதுக்கரை வட்டாரம், செட்டி பாளையம் பெரியார் நினைவு சமத்து வபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற் றுவருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மே

    ற்கொண்டு. புனரமைப்பு பணிகளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகள் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்து பயனா ளிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை த்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.இந்த ஆய்வி ன்போது மதுக்களை வட்டாட்சியர் முருகேசன் மற் றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில், சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் 4 சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் 78 வீடுகளும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகளும், மதுக்கரை வட்டாரம், செட்டி–பாளையம் பேரூராட்சியில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வெள்ளகிணறு பகுதியில் ரூ.43லட்சம் மதிப்பில் 80 வீடுகளும் என மொத்தம் 319 வீடுகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

    இதில் 72 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகளும், மதுக்கரை, செட்டிபாளையம் பேரூராட்சியில் 2 வீடுகளும் என மொத்தம் ரூ.18.87 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் மறுசீரமைப்புபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சமத்துவபுரங்களில் 2 குடிநீர் வழங்கல் பணிகள், 4 சாலைபணிகள், 45 தெருவிளக்கு பணிகள், ஒரு விளையாட்டு மைதானம், 4 சமுதாய நலக்கூடங்கள், 2 நூலக கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம், 3 நியாயவிலைகடைகள், 3 தந்தை பெரியார் சிலைகள், 3 சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.93.71 லட்சம் மதிப்பீட்டில் 58 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு நடந்து பணிகள் மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சப் கலெக்டர் திருதாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×