search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சமத்துவபுரங்களில் 321 வீடுகளில் பழுதுபார்ப்பு பணிகள்
    X

    கோவையில் சமத்துவபுரங்களில் 321 வீடுகளில் பழுதுபார்ப்பு பணிகள்

    • நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரி ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, வெள்ளை கிணறு (மாநகராட்சி பருதி) ஆகிய இடங்களில் சமத்துவப்புரங்கள் உள்ளன.

    சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 321 வீடுகள் ரூ.160 கோடி மதிப்பீட்டில், பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

    இதில் ரூ.152 கோடி மதிப்பீட்டில் 305 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், மதுக்கரை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.9லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை எஸ்.எஸ் குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமத்துவபுரங்களில் குடிநீர் வழங்கல் பணிகள், சாலைபணிகள், தெருவிளக்கு பணிகள், விளையாட்டு மைதானம், சமுதாய நலக்கூடங்கள், நூலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைகடைகள், தந்தை பெரியார் சிலைகள், சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.92.93 லட்சம் மதிப்பீட்டில் 43 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளில் 37 பணிகள் ரூ.27.18 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது

    மதுக்கரை வட்டாரம், செட்டி பாளையம் பெரியார் நினைவு சமத்து வபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற் றுவருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மே

    ற்கொண்டு. புனரமைப்பு பணிகளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகள் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்து பயனா ளிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை த்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.இந்த ஆய்வி ன்போது மதுக்களை வட்டாட்சியர் முருகேசன் மற் றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×