search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழமையான"

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன.
    • இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோ விலில் பஞ்ச பாண்டவர்க ளான தருமர், பீமன், அர்ஜூ னன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிரா மத்தில் கோவில் திரு விழாக்கள் நடத்துவதில் 2 கிராம மக்களிடையே முன் னோர்கள் கலந் தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்ப தும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி களையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதி யம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 23–-ந் தேதி வெகுசிறப்பாக நடை பெற்றது. இதனைத்தெ ாடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். வருகிற 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யா ணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், 29, 30-ந்தேதி களில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவு பதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தபடி மன்னா யக்கன்பட்டி மாரி யம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை வழி நெடுக திரண்டு நின்று கண்டுகளித்த 2 கிராம மக்களும் தாம்பூலம் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்த னர். இதை தொடர்ந்து சாமிகளை மாரியம்மன் கோவில் வைத்து, தொடர்ந்து 18 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விருந்து படைக்க உள்ளனர். தேர்திருவிழா நடத்தி கொண்டாடி நிறைவு செய்ததும், மீண்டும் திரவுபதி அம்மன் கோவி லுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்துள்ள னர். தேர்திருவிழாவின் போது, வாழப்பாடி கோவில் நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அருகருகே உள்ள 2 கிரா மங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன் ஆகியோர் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னா யக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகதான் இந்த பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது என்றனர்.

    • பூமிக்கு அடியில் 6 அடி உயரம் சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர்.
    • இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் மெயின் ரோடு திருநகரில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரன் கோவில் இருந்தது.

    நாளடைவில் இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும் இந்த கோவிலில் இருந்த சிவலிங்க திருமேனி இல்லாமல் கருட கம்பம் மட்டுமே இருந்தது.

    இந்த நிலையில் அரண் பணி சிவனடியார் கூட்டம் சார்பில் இந்த சிவன் கோவிலை புனரமைத்து கட்ட முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி கோவிலை கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்து எந்திரங்கள் மூலமாக அங்கிருந்த கருட கம்பத்தை அகற்றினர்.தொடர்ந்து பணிகள் நடந்தன.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பணிகள் தொடர்ந்து நடந்தன. மதியம் எந்திரம் மூலமாக மண்ணை அகற்றிக் கொண்டிருந்தனர்.

    தொடர்ந்து 5 அடி வரை பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது. இதையடுத்து தொழிலாளர் அந்த பகுதியில் இருந்த மண்ணை அகற்றி விட்டு பார்த்தனர்.

    அப்போது பூமிக்கு அடியில் சுமார் 6 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர். இது குறித்து பொது மக்களுக்கு தெரிவித்தனர்.

    இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். இதை தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிவலிங்க சிலையை மீட்டு எடுத்தனர். அந்த சிலையை பொதுமக்கள் சுத்தம் செய்து பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் கூடாரம் அமைத்து அங்கு அந்த சிவலிங்கத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர்.

    இது பற்றி அறிந்ததும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து தொடர்ந்து சிவலிங்கத்தை வணங்கி சென்றனர்

    பிரதோஷம் தினத்தில் கோவில் திருப்பணியின் போது சிவலிங்க திருமேனி கிடைத்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

    ×