search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi Amman Temple"

    • கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க உத்தரவு.

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். 

    இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், திரவுபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சந்திரசேகர் என்ற அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆனால், பொது மக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு திரவுபதி அம்மன் கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது
    • பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும்

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

    இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும் என் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார். கோயில் திறக்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை போதுமான பாதுகாப்பது ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இவ்வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன.
    • இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோ விலில் பஞ்ச பாண்டவர்க ளான தருமர், பீமன், அர்ஜூ னன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிரா மத்தில் கோவில் திரு விழாக்கள் நடத்துவதில் 2 கிராம மக்களிடையே முன் னோர்கள் கலந் தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்ப தும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி களையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதி யம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 23–-ந் தேதி வெகுசிறப்பாக நடை பெற்றது. இதனைத்தெ ாடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். வருகிற 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யா ணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், 29, 30-ந்தேதி களில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவு பதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தபடி மன்னா யக்கன்பட்டி மாரி யம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை வழி நெடுக திரண்டு நின்று கண்டுகளித்த 2 கிராம மக்களும் தாம்பூலம் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்த னர். இதை தொடர்ந்து சாமிகளை மாரியம்மன் கோவில் வைத்து, தொடர்ந்து 18 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விருந்து படைக்க உள்ளனர். தேர்திருவிழா நடத்தி கொண்டாடி நிறைவு செய்ததும், மீண்டும் திரவுபதி அம்மன் கோவி லுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்துள்ள னர். தேர்திருவிழாவின் போது, வாழப்பாடி கோவில் நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அருகருகே உள்ள 2 கிரா மங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன் ஆகியோர் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னா யக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகதான் இந்த பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது என்றனர்.

    ×