search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancient"

    • 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேளாண்மை கிடங்கு கட்டிடம் உள்ளது.
    • கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கட்டிடத்தில் இடுபொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலக கட்டிடத்துக்கு அருகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேளாண்மை கிடங்கு கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு தேவையான விதை நெல், உரங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டங்கள், வேளாண் கருவிகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.

    பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள மேற்கூரையின் வழியே மழை நீர் உள்ளே புகுந்து வந்ததால் கட்டிடத்துக்குள் வேளாண் இடு பொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது.

    இதனால் வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் அலுவலக கட்டிடத்துக்குள் ஒரு பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கட்டிடத்தில் இடுபொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கட்டிடம் பராமரிப்பின்றி இருந்து வருகிறது.

    எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு அதில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன.
    • இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோ விலில் பஞ்ச பாண்டவர்க ளான தருமர், பீமன், அர்ஜூ னன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிரா மத்தில் கோவில் திரு விழாக்கள் நடத்துவதில் 2 கிராம மக்களிடையே முன் னோர்கள் கலந் தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்ப தும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி களையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதி யம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 23–-ந் தேதி வெகுசிறப்பாக நடை பெற்றது. இதனைத்தெ ாடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். வருகிற 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யா ணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், 29, 30-ந்தேதி களில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவு பதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தபடி மன்னா யக்கன்பட்டி மாரி யம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை வழி நெடுக திரண்டு நின்று கண்டுகளித்த 2 கிராம மக்களும் தாம்பூலம் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்த னர். இதை தொடர்ந்து சாமிகளை மாரியம்மன் கோவில் வைத்து, தொடர்ந்து 18 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விருந்து படைக்க உள்ளனர். தேர்திருவிழா நடத்தி கொண்டாடி நிறைவு செய்ததும், மீண்டும் திரவுபதி அம்மன் கோவி லுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்துள்ள னர். தேர்திருவிழாவின் போது, வாழப்பாடி கோவில் நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அருகருகே உள்ள 2 கிரா மங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன் ஆகியோர் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னா யக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகதான் இந்த பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது என்றனர்.

    • அகழாய்வில் பண்டையகால பொருட்கள் கிடைத்தன.
    • யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    25 ஏக்கர் பரப்பளவில் வைப்பாற்றின் கரையில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த வரலாறு குறித்து அறிவதற்காக கீழடி போன்று அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 அகழாய்வு குழிகள் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளன.

    இதில் ஏராளமான யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன்கள், விலை மதிப்பெற்ற சூது பவளம், பெண்கள் அணியும் தொங்கட்டான்கள், காதணிகள், கண்ணாடி பாசிமணிகள், சூடு மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    9-வது அகழாய்வு குழுவில் ஏராளமான சுடுமண்னால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், முதுமக்கள் தாழி, 40-க்கும் மேற்பட்ட சிறிய வடிவிலான குடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் முதுமக்கள் தாழி மற்றும் இந்த குடங்களை சேதமடையாமல் எடுப்பதற்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    முதுமக்கள் தாழி மற்றும் மண் குடங்களில் ஆராய்ச்சி செய்யும் போது எந்த காலத்தில் மக்கள் வசித்துள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களும் கிடைத்துள்ளன. விரைவில் உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியமாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் கோவிலைச் சுற்றி வந்து கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. மேலும் மூலவர் கோலத்தி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது.
    • வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது.

    திருப்பூர்,

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் பெரு வழிகள் எனப்படும் பழங்கால வணிக பாதைகள் திருப்பூர் மாவட்டம் வழியாக பயணித்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    இந்தப்பாதைகளை காக்க ஒவ்வொரு பாதையிலும் காவல் வீரர்கள் இருந்ததும், இந்தப் பாதைகளை பயன்படுத்தும் வணிகர்கள், வழியில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு வரி கொடுத்த சான்றுகளும் ஏராளமாக கிடைத்த வண்ணம் உள்ளன. அதே போல்,மேற்கத்திய நாட்டவர்கள் இங்கு வணிகத்துக்கு வந்து சென்றதும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் பண்டைய கொங்கு 24 நாடுகளான, காங்கேய நாடு, பூந்துறை நாடு, குறுப்பு நாடு என இருந்துள்ளதும், இவை உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது. அதில் மிகச் சிறப்படையதாக காங்கேயநாடு உள்ளது. இங்கு "பெரில்" எனப்படும் பச்சைக் கல்லுக்குப் பெயர் பெற்ற படியூரும், சிவன் மலையும் பண்டைய காங்கேய நாட்டில் அமைந்திருந்ததால் இக்கற்களை விலைக்கு வாங்க வணிகர்கள் இங்கு வந்தனர்.

    மேலும் மேற்குக் கடற்கரையில் வந்து இறங்கிய மேலை நாட்டு வணிகர்கள், பேரூர், வெள்ளலூர், காங்கேயம், கரூர் வழியாகப் பூம்புகார் வரை சென்ற பண்டைய புகழ்பெற்ற "இராசகேசரி பெருவழியில்" காங்கேய நாடு அமைந்திருந்ததால் பண்டைய காலத்தில் இது வணிகத்தால் இப்பகுதி சிறப்புற்று விளங்கியுள்ளது. காங்கேய நாட்டில் தொன்மையான ஊர்கள் 12 கிராமங்கள் ஆகும். ஓங்கு புகழோடு விளங்கிய பண்டைய கிராமங்களில் பார்புகழ் "பழஞ்சேபளி" என்றும், பரஞ்சேர்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சேர்வழியும் அந்த கிராமங்களில் ஒன்றாகும்.

    தற்போது காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர்வழியில் உள்ள "மகாதேவர் நட்டுராமாந்தார்" என அழைக்கப்படும் மத்யபுரீஸ்வரர் கோவிலில், திருப்பூரில் இருந்து இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க கி.பி.1038 ம் ஆண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் கூறுகையில், காஞ்சி மாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் தென் கரையிலும், சிவன்மலையில் இருந்து செல்லும் ஓடையின் வட கரையிலும் அமைந்துள்ள ஊர் பரஞ்சேர்வழி. பண்டைய கொங்கு மண்டலத்தில் சைவ,வைணவ மற்றும் சமணம் என முச்சமயங்களும் தழைத்து வளர்ந்த ஊர் பரஞ்சேர்வழி ஆகும். இங்குச் சமணப்பள்ளி இருந்ததற்குச் சான்றாக இன்றும் இங்கு கி.பி.10. ம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று உள்ளது.

    சமணப் பள்ளிகளில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் மக்களுக்கும், மாணாக்கர்களுக்கும், துறவிகளுக்கும் அறம் உரைத்து வாழ்ந்திருக்கிறார்கள். உணவு, அடைக்கலம், மருந்து ,கல்வி முதலிய நால்வகைத் தானங்களைச் சமணர்கள், சமணப்பள்ளி மூலம் மேற்கொண்டு இருந்தனர். இங்கு இத்தகைய சமணப்பள்ளி செயல்பட்டதை இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டும் மெய்ப்பிக்கிறது

    இந்தக் கல்வெட்டில் பரஞ்சேர்வழி "பழஞ்சேபளி" என்று குறிப்பிடப்படுகிறது.' பளி' என்பது பண்டு சமணர்கள் வாழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல் ஆகும். இந்தக் கல்வெட்டு கொங்கு மண்டலத்தைக் கி.பி.1004 முதல் 1047 வரை சிறப்பாக ஆட்சி செய்த கோனாட்டு அரசர்களில் மூன்றாவதாக வரும் விக்கிரம சோழன் காலத்தை சேர்ந்தது ஆகும்.

    இது அம்மன்னனின் 34-வது ஆட்சியாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் ஏற்கனவே அன்னூர், பெரமியம், வள்ளியரச்சல், அகிலாண்டபுரம், அரசம்பாளையம், மூலனூர் மற்றும் திங்களூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே வட்டெழுத்துக் கல்வெட்டுகள் என்பது ஓர் தனிச்சிறப்பாகும். வட்டெழுத்து என்பது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த தமிழ் எழுத்து வரிவடிவம் ஆகும்.

    இங்கு நமக்குக் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது. 30 செ.மீ. அகலமும், 90 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் மொத்தம் 17 வரிகள் தான் கிடைத்துள்ளன. கீழ்ப்பகுதி சேதமடைந்துள்ளது. விக்கிரம சோழனுடைய மற்ற வட்டெழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது அது பெரும்பாலும் திருக்கோயில் அல்லது சமணப்பள்ளிக்குக் கொடை அளித்தது பற்றியே வருவதால் இங்கும் 1038-ஆம் ஆண்டு கொடை அளித்தது பற்றி இக்கல்வெட்டு இருக்கலாம் என்றார். 

    ×