search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகழாய்வில் கிடைத்த பண்டையகால பொருட்கள்
    X

    அகழாய்வில் கிடைத்த பண்டையகால பொருட்கள்

    • அகழாய்வில் பண்டையகால பொருட்கள் கிடைத்தன.
    • யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    25 ஏக்கர் பரப்பளவில் வைப்பாற்றின் கரையில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த வரலாறு குறித்து அறிவதற்காக கீழடி போன்று அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 அகழாய்வு குழிகள் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளன.

    இதில் ஏராளமான யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன்கள், விலை மதிப்பெற்ற சூது பவளம், பெண்கள் அணியும் தொங்கட்டான்கள், காதணிகள், கண்ணாடி பாசிமணிகள், சூடு மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    9-வது அகழாய்வு குழுவில் ஏராளமான சுடுமண்னால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், முதுமக்கள் தாழி, 40-க்கும் மேற்பட்ட சிறிய வடிவிலான குடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் முதுமக்கள் தாழி மற்றும் இந்த குடங்களை சேதமடையாமல் எடுப்பதற்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    முதுமக்கள் தாழி மற்றும் மண் குடங்களில் ஆராய்ச்சி செய்யும் போது எந்த காலத்தில் மக்கள் வசித்துள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களும் கிடைத்துள்ளன. விரைவில் உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியமாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×