search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை"

    கம்பத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தாத்தப்பன்குளத்தை சேர்ந்த முகமதுபாசில்(21) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக பாசில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவரது ஆட்டோவில் மாணவியை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

    சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவியை கையை பிடித்து இழுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு பாசில் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே புகைப்படத்தை சமூகவலைத் தளங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் பாசில்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    மயிலாப்பூரில் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். #schoolstudentmolestation

    சென்னை:

    மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. அதே பகுதியை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரவி நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் மாணவியை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் பயந்து போன மாணவி கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரவியின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது ரவி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர் ரவியை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #schoolstudentmolestation

    ×