search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலசரக்கு"

    • விருதுநகரில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
    • மொத்த பலசரக்கு கடைகள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.

    விருதுநகர்

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் விருதுநகரில் இறுதிகட்ட தீபாவளி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

    விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடை களில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.மேலும் நூற்றுக்கணக் கானோர் மெயின்பஜாரை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு கடைகளை அமைத்து வியா பாரம் செய்து வருகின்றனர்.

    விருதுநகரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்ததால் தீபாவளி வியா பாரம் பாதித்தது. இதனால் பொதுமக்கள் காலை நேரங்களில் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். நேற்று மாலை மழை இல்லை. இதன் காரணமாக மெயின்பஜாரில் தீபாவளி கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்தோடு வந்து பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதேபோல் பாத்திரக் கடைகள், ரோட்டோர கடைகள், மொத்த பலசரக்கு கடை கள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள காரங்காட்டு அடுத்த புல்லுவிளையை சேர்ந்தவர் பால்பாண்டி யன் (வயது 67). இவர் பேயன்குழியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பூமி நாதன் தெருவைச் சேர்ந்த அஜி (43) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பேயன்குழி வந்த அஜி, பால்பாண்டியனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.4 லட்சம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அஜி, பால்பாண்டியனை அரிவாளால் வெட்டியதில் பால்பாண்டியனின் இடது உள்ளங்கை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து பால்பாண் டியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப் பதிவு செய்து அஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜி முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • பலசரக்கு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு முஸ்லிம் தெருவை சேர்ந்த வர் நசீர் அலி (வயது 55). இவர் அதே பகுதி யில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஜாரியா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெரியபட்டினத்தில் தனக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை நசீர்அலி ரூ.27 லட்சத்துக்கு சஹாரூல் ஜமால் என்பவருக்கு விற்றார். இதில் பெரியபட்டினம் பண்ணக்கரையை சேர்ந்த செய்யதுஇபுராகிம் என்ப வர் தரகராக செயல்பட்டு நிலத்தை விற்று கொடுத்த தாக தெரிகிறது.

    ஆனால் நிலம் விற்ற பணத்தில் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம்மட்டுமே நசீர் அலியிடம் கொடுக்கப்ப ட்டது. மீதமுள்ள ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்படவில்லை.

    நசீர்அலி நிலம் விற்ற மீதி பணத்தை தருமாறு செய்யது இபுராகிமிடம் அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நசீர்அலி தொழு கையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யது இபுராகிம் அவரி டம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த அவர், நசீர் அலியை சரமாரி யாக தாக்கி தள்ளி விட்ட தாக தெரிகிறது. இதில் அவர் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியலில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியபட்டினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நசீர்அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராமநாதபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது இபுராகிமை ேதடி வருகின்றனர்.

    ×