search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது
    X

    கோப்பு படம்

    இரணியல் அருகே பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள காரங்காட்டு அடுத்த புல்லுவிளையை சேர்ந்தவர் பால்பாண்டி யன் (வயது 67). இவர் பேயன்குழியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பூமி நாதன் தெருவைச் சேர்ந்த அஜி (43) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பேயன்குழி வந்த அஜி, பால்பாண்டியனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.4 லட்சம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அஜி, பால்பாண்டியனை அரிவாளால் வெட்டியதில் பால்பாண்டியனின் இடது உள்ளங்கை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து பால்பாண் டியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப் பதிவு செய்து அஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜி முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    Next Story
    ×