search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளி"

    • திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.
    • மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    அவிநாசி :

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி, சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு பலரும் குடியேறிவிட்டனர்.

    திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக கூறி சில அரசியல் கட்சியினர், தனி நபர்கள் சிலர் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பூண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ,வீரபாண்டி, திருக்குமரன் நகர், பாரதி நகர், ஜெயா நகர், பூண்டி, அவிநாசியில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 3,744 வீடுகளுக்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் வாரியத்தின் ஒப்புதலுடன், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.புதிதாக மனுக்கள் எதுவும் பெறப்படாது என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.அவிநாசி சூளையில் அடுக்குமாடி குயிருப்பு உள்ள இடத்துக்கு, சோலை நகர் எனவும், திருமுருகன்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்துக்கு, பூண்டி நகர் எனவும் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.

    • இலங்கை தமிழர் வீடுகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தித்தரும் 1990-ம் ஆண்டு அவசரத்தேவைகளை கருத்தில் கொண்டு தலா 100 சதுரஅடி பரப்பளவில 240 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது 183 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் முகாம் வாழ் தமிழர்களின் அடிப்படை மேம்பாட்டிற்காக குடும்பத்தலைவருக்கு ரூ.1,500-ம், 18 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு ரூ.1,000மும் மற்றும் குடிமைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    முகாம் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது பொது சுகாதார வளாகம், தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் பழைய வீடுகள் பயன்படுத்த ஏதுவாக இல்லாத வீடுகள் கண்டறியப்பட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணி துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான தனி வட்டாட்சியர்உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சனிதேவி, சங்கரபரமேஸ்வரி, உதவிப்பொறியாளர்கள் தமிழரசி, தேவிசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×