search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநியமன ஆணை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சாகிர் உசேன்கல்லூரி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 110 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித்திட்ட அலுவலர் விஜயசங்கரி வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். இதில் 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 110 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர், உதவித்திட்ட அலுவலர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணிநியமன ஆணை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்களுடன், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம், உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன் மற்றும் ஆரிப்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். இளையான்குடி, வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

    • தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது
    • இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. உறவின்முறை தலை–வர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

    கல்லூரியில் வேலை–வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 70 இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு பணி–நியமன ஆணைகளை உறவின்முறை நிர்வாகி–கள் வழங்கினர். இதனை–தொடர்ந்து சமுதாய பணியில் சேவையாற்றி வரும் தலைமை ஆசிரி–யர்கள் மற்றும் பேராசிரி–யர்களுக்கு கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை துணைமுதல்வர் மாதவன், பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.

    ×