search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிக்க முயற்சி"

    • 8 பேர் கைது
    • மிளகாய் பொடி தூவி துணிகரம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் கவுசிக் என்பவருக்கு சொந்த மான நகை கடை உள்ளது. இந்த கடையில் கணக்காளராக ஜோன்றம்பள்ளியை சேர்ந்த அஜித் குமாரும் (வயது 23), தென்றல் நகரை சேர்ந்த பரத் (35) விற்பனை மேலாளராகவும் வேலை செய்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நகை கடையில் வசூலான ரூ.60 லட்சத்தை அஜித்குமாரும், பரத்தும் எடுத்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள வங்கியில் செலுத்த சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கில் அவர்களை பின்தொ டர்ந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூஞ்சோலை பகுதியில் அஜித்குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி, மர்ம கும்பல் பணத்தை பறிக்க முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட 2 பேரும் கத்தி, கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதை கண்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களான முத்தமிழ் நகரை சேர்ந்த சுரேஷ்குமார், செலந்தம்ப ள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் (25), வேலநகரைச் சேர்ந்த ராஜேஷ், பெங்களூரைச் சேர்ந்த ரவிசங்கர் (37) மற்றும் 3 சிறுவர்கள் பணத்தை வழிபறி செய்ய முயன்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து போலீசார் பிரபாகரன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.
    • அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    மத்தூர்,

    தருமபுரியில் தனியார் பைனான்ஸ்-ல் பணிபுரிபவர் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது25). வழக்கம்போல் இவர் நேற்று கலெக்சனுக்காக மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிவம்பட்டி ஏரிக்கரை மீது சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், வண்டியை வழிமறித்து, யோகராஜ் கையிலிருந்த பணத்தை கேட்டு கத்தியை காட்டி தாக்கியுள்ளனர்.

    அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட யோகராஜ், ஒரு கையால் கத்தியை கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு நபர் கத்தியால் தாக்க முற்படும்போது, அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

    அவர் விழும்போது அவர்கள் வந்த இரு சக்கர வாகனமும் கீழே விழுந்துள்ளது. அதற்குள் கையிலிருந்த கத்தியை தனது சக்தி கொண்டு சினிமா ஹீரோ போல் வலைத்துள்ளார்.

    இதனை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இருவர் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு தப்பித்தனர்.

    இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.

    அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்விடத்திற்கு மீண்டும் திரும்ப வந்த கொள்ளையர்கள், தப்பிவிட்டாய், ஆனால் அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    கத்தியால் காயமடைந்த யோகராஜ் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் மனு ஏற்பு ரசீது வழங்கியுள்ளனர்.
    • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு பெற்றுத்தருகிறேன் என்று கூறி வருகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரூ.2 லட்சம் கொடுத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக, செல்வராஜ் எம்.எல்.ஏ. பெயரை சொல்லி வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சிவசங்கர் என்பவர் செல்போனில் பேசியுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து தெரிய வந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து க.செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 'சிவசங்கர் என்ற நபர் எனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தோடு, எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு பெற்றுத்தருகிறேன் என்று கூறி வருகிறார். அவரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் மனு ஏற்பு ரசீது வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
    • போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவோம். இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

    தவறினால் உங்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து விசாரித்த போது போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வணிகவரி இணை ஆணையரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரின் புகைப்படத்தை பார்த்தவர்களில் 2 பேர் மட்டும் புகைப்படம் வந்த மோசடி கும்பலின் நம்பரை தொடர்பு கொண்டு, அவருக்கு என்னவாயிற்று என கேட்டுள்ளனர்.
    • அவர்களிடம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏமாற்றி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர்.

    கோவை:

    நாகரீக கால வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றி கொள்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் வங்கி பணப்பரிமாற்றம், பொருட்கள் வாங்குவது, போன், டி.வி. வாங்குவது, அதற்கு ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களையும் நாம் ஆன்லைன் மூலமே செய்து கொள்கிறோம்.

    இப்படி பல விஷயங்களில் மக்களுக்கு நன்மை தருவதாக அமைந்திருக்கும் ஆன்லைன்களில் பல்வேறு விதமான மோசடிகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை தெரிவியுங்கள் என்று கூறி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். போட்டோக்களை மார்பிங் செய்து பணம் பறிப்பது, பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி பணம் பறிப்பது என புதிது, புதிதாக தினம் ஒரு மோசடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்த மாதிரியான சைபர் குற்றங்களில் இருந்து மக்கள் தப்பித்து கொள்வதற்கு சைபர் கிரைம் போலீசாரும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் மோசடிகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் கூட உங்கள் செல்போனில் உள்ள 4 ஜியை 5 ஜியாக மாற்றி தருகிறோம் என்று போன் செய்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலாக உங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்கள் தங்களிடம் இருக்கிறது என கூறி ஒரு கும்பல் கோவை வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்தது. அதனை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் பேசிய நபர், நீங்கள் செய்து வரும் தொழிலுக்கு சம்பந்தமான பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும், உங்களுக்கு பிடித்தால் அதற்கான தொகையை பேசி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

    அதற்கு வாலிபரும் பார்த்து விட்டு சொல்கிறேன் என கூறியதாக தெரிகிறது. ஒரு நாள் வாலிபர் வேலை முடிந்து தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு முதலில் வந்த நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தது. அவரும் போனை எடுத்துள்ளார். அப்போது அவர் முன்பு இளம்பெண் ஒருவர் ஆபாசமாக நிற்பது போன்று இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் போனை துண்டித்து விட்டார்.

    சில நிமிடங்களில் அவரது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வாலிபரின் படம் அரை நிர்வாணமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வந்திருந்தது. மேலும் இந்த போட்டோவை வேறு யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றால் எங்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடு என மிரட்டியது. அப்போது தான் வாலிபருக்கு தன்னை மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பணம் பறிக்க முயல்வது தெரியவந்தது.

    சுதாரித்து கொண்ட அந்த வாலிபர், அந்த புகைப்படம் என்னுடையது கிடையாது. நீங்கள் கேட்கும் பணத்தை நான் தர மாட்டேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதனை தொடர்ந்து அந்த மர்மகும்பல் வாலிபரின் செல்போனுக்கு இன்னும் ஏராளமான புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர். மீண்டும் வாலிபரை தொடர்பு கொண்டு நாங்கள் கேட்கும் பணத்தை நீ தராவிட்டால் இந்த புகைப்படத்தை எல்லாம் உன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் எனவும் மிரட்டினர்.

    ஆனால் வாலிபர் அந்த கும்பலின் எந்தவித பேச்சுக்கும் மசியவில்லை. முடியவே முடியாது என கூறி இணைப்பை துண்டித்தார். இந்த நிலையில் மர்மகும்பல், வாலிபரின் பேஸ்புக் ஐ.டி.யில் நுழைந்து அவர்களது உறவினர்கள், நண்பர்களின் மொபைல் எண்களை தேடி எடுத்துள்னர்.

    பின்னர் அவர்களின் செல்போன்களுக்கு வாலிபர் ஆஸ்பத்திரியில் அடிபட்டு படுத்து கிடப்பது போன்ற புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு நீ ஆஸ்பத்திரியில் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளதே என கேட்டனர். வாலிபர், அது நான் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். மோசடி கும்பல் என்னிடம் பணம் பறிக்க இப்படி செய்துள்ளது. நீங்கள் நம்பி எதுவும் அனுப்பி விட வேண்டாம் என கூறியுள்ளார்.

    வாலிபரின் புகைப்படத்தை பார்த்தவர்களில் 2 பேர் மட்டும் புகைப்படம் வந்த மோசடி கும்பலின் நம்பரை தொடர்பு கொண்டு, அவருக்கு என்னவாயிற்று என கேட்டுள்ளனர். அவர்களிடம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏமாற்றி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர். மேலும் அவர்களுக்கும் வீடியோ கால் செய்து விட்டு 5 நொடிகளில் இணைப்பை துண்டித்தும் விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர்கள் வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் இந்த சம்பவங்கள் அவர்களுக்கும் தெரியவந்தது.

    இதுகுறித்து அந்த வாலிபர் கூறுகையில், என்னிடம், அவர்கள் செய்து தொழில் சம்பந்தமான பொருட்கள் இருப்பதாக கூறியே தொடர்பு கொண்டனர். ஆனால் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் பறிக்க முயன்றது. ஆனால் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால் அந்த கும்பல் நான் ஆஸ்பத்திரியில் இருப்பது போன்று புகைப்படங்களை மார்பிங் செய்து எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி பணம் பறித்துள்ளனர்.

    இது தொடர்பாக நான் சைபர் கிரைம் போலீசாரை போனில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தேன். போலீசார் இதுபோன்று தினமும் 30 முதல் 40 போன்கள் வருகிறது. முறையாக நேரில் வந்து புகார் கொடுங்கள் என்றனர். நான் வேண்டாம் என்றேன். உடனே போலீசார் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் ரிப்போர்ட் பிளாக் என ஒன்று இருக்கும். அதில் போய் புகார் தெரிவித்தால். மறு நிமிடமே அந்த நம்பரில் இருந்து போனோ, எதுவுமே வராது என்றனர். நானும் அதே போன்று செய்தேன். அதன் பிறகு எனக்கு எதுவும் அந்த நம்பரில் இருந்து வரவில்லை.

    நான் மட்டுமில்லை பலரும் இதுபோன்று மோசடி கும்பலின் வலையில் சிக்கி கொள்கின்றனர். எனது நண்பர் ஒருவர் கூட மோசடி கும்பலிடம் சிக்கி 5 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்றார். எனவே யாரும் இதுபோன்று போன்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

    • தேனி கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் பேரில் மர்ம நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்- அப் கணக்கு தொடங்கினார். அதில் கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.

    இந்த தகவல் கலெக்டர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்க ரேவிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மீண்டும் மற்றொரு எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ேமலும் ஒரு மர்ம நபர் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ×