என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி
- தேனி கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் பேரில் மர்ம நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்- அப் கணக்கு தொடங்கினார். அதில் கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.
இந்த தகவல் கலெக்டர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்க ரேவிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மீண்டும் மற்றொரு எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ேமலும் ஒரு மர்ம நபர் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்