search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுவந்தனை"

    • இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.
    • காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு.

    பசுபால் சுரந்த இடத்தில் பவளநிற சுயம்பு லிங்கம் பசுவந்தனை திருத்தலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர்.

    இவ்வூர் மதுரை-நெல்லை ரெயில்வே வழியில் கடம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து கிழக்கே

    10 கிலோ மீட்டர் தூரத்திலும், மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறில் இருந்து கிழக்கே

    21 கி.மீ. தூரத்திலும், தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானிலிருந்து மேற்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது.

    சிறப்புமிக்க இத்தலம் பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலாகும்.

    முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ள திருக்கோவிலாகும்.

    இத்திருக்கோவில் இரண்டாம் மாறவாமன் சுந்தரபாண்டியனின் ஏழாம் ஆட்சி காலத்தில் கி.பி.1245-ல் கட்டப்பட்டது

    எனவும் ஆலால சுந்தரப் பெருமாள் என்பவன் சிவனுக்கு கோவில் எழுப்பி நிலங்களை அளித்தான் எனவும்,

    இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.

    காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு.

    அதனை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளைப் போற்றி வந்தான்.

    பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம்.

    அந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் பசுக்கூட்டத்தில் வந்து சேர்ந்து விடும்.

    தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தான்.

    இறையுணர்வு மிக்க தனது பசுபால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினான்.

    இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்ததைக் கண்டு மெய் உருகி வழிபட்டான்.

    பசுபால், சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.

    அதன்படி அந்த இடத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்து அதனைச்சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்தான். நகரமாக ஆக்கினான்.

    பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ள இத்திருத்தலம் பசுவந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக்கப் பெறலாயிற்று.

    பசு வந்து நீராடிய குளம் சிவதீர்த்தம் என்றும் கோசிருங்காவாவி என்றும் அழைக்கப்படுகிறது.

    • பசுவந்தனை சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
    • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் பிறந்த இல்லத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றார்.

    புதியம்புத்தூர்:

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் ஆய்வு செய்தார்.

    அரசு பள்ளியில் ஆய்வு

    பசுவந்தனை சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி மாணவர்களிடம் பள்ளிக்கு வர பஸ் வசதி உள்ளதா? என கேட்டறிந்தார்.

    வ.உ.சிதம்பரனார்

    அதன் பின்பு ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் பிறந்த இல்லத்திற்கு சென்ற அமைச்சர் சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

    அங்கிருந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்குச் சென்ற அமைச்சர் அங்கு கட்டபொம்மனின் சுதந்திர போராட்ட வரலாறுகளை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டார். அங்குள்ள பழைய கோட்டையையும் பார்வையிட்டார்.  

    ×