search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுவந்தனை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
    X

    பசுவந்தனை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

    • பசுவந்தனை சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
    • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் பிறந்த இல்லத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றார்.

    புதியம்புத்தூர்:

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் ஆய்வு செய்தார்.

    அரசு பள்ளியில் ஆய்வு

    பசுவந்தனை சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி மாணவர்களிடம் பள்ளிக்கு வர பஸ் வசதி உள்ளதா? என கேட்டறிந்தார்.

    வ.உ.சிதம்பரனார்

    அதன் பின்பு ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் பிறந்த இல்லத்திற்கு சென்ற அமைச்சர் சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

    அங்கிருந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்குச் சென்ற அமைச்சர் அங்கு கட்டபொம்மனின் சுதந்திர போராட்ட வரலாறுகளை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டார். அங்குள்ள பழைய கோட்டையையும் பார்வையிட்டார்.

    Next Story
    ×