search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் எதிர்ப்பு சக்தி"

    • குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
    • குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

    சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

    அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

    குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .

    உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.

    அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

    கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

    முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.

    • தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
    • தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.

    எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

    ஊட்டச்சத்து கலவை:

    தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

    எலும்பு ஆரோக்கியம்:

    எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    கண் பார்வை:

    தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

    பொலிவான கூந்தல்:

    தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

    புற்றுநோய்:

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    உடல் எடை குறைய:

    தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

    100 கிராம் தக்காளியில்...

    நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

    புரதச்சத்து- 0.9 கிராம்

    கார்ப்ஸ்- 3.9 கிராம்

    சர்க்கரை- 2.6 கிராம்

    நார்ச்சத்து- 1.2 கிராம்

    கொழுப்பு- 0.2 கிராம்

    மொத்த கலோரிகள்- 18

    • 100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது.
    • ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

    100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

    பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

    பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

    இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.
    • உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

    அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

    ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண் டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

    • சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும்.
    • உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும்.

    பருவகால உணவு என்பது அந்தந்த பகுதிகளில், அந்தந்த காலகட்டத்தில் விளையும் உணவு வகைகளாகும். அப்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சுவையானதாகவும், புத்துணர்ச்சியுடனும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாகவும் அவை இருக்கும். சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும். ஆனால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளாக இருக்கலாம்.

    உள்ளூர் பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    அந்தந்த பருவ காலத்தில் உள்ளூரில் விளையும் பழங்கள் நன்கு பழுத்து, அதிக சுவை தரும். இயற்கையான சூழலில் சரியான விளைச்சலில் அறுவடை செய்யப்படுவதால் ஊட்டச்சத்தும் மிகுந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், ஆரஞ்சு பழத்தின் சுவை கோடையிலும், குளிர்காலத்திலும் மாறுபட்டு தெரியும். அதற்கு பருவகாலநிலைதான் காரணம்.

    உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும். அவைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது சுவையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அவற்றை அறுவடை செய்த உடனே உட்கொள்ளும்போது வைட்டமின் சி, போலேட், கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் நிரம்பி இருக்கும். அதிக நாட்கள் சேகரித்துவைத்து சாப்பிட்டால், ஊட்டச்சத்தின் அளவும், தரமும் குறைந்துபோய்விடும். மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பருவகால பழங்கள் பிரஷ்ஷாகவும், தரமானதாகவும் இருக்கும். வெளியூர்-வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்படும் பழங்கள் தரம் மற்றும் சுவை குறைந்தே காணப்படும்.

    உள்நாட்டு பருவகால பழங்கள், காய்கறிகள் அந்த சீதோஷ்ணநிலைக்கு ஈடுகொடுத்து நன்றாக வளரக்கூடியவை. அதனால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்காது. பெரும்பாலான உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சை கொல்லி களின் தாக்கம் நிறையவே இருக்கிறது. அவற்றை அகற்றுவது கடினம். பருவகால உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் ரசாயனங்கள், அசுத்தமான பொருட்கள் சேருவதை கட்டுப்படுத்த முடியும்.

    விவசாயிகள் பருவ காலத்தில் குறிப்பிட்ட பயிர்களை அதிகமாக விளைவிக்கும்போது விவசாயத்திற்கான செலவு குறைகிறது. அறுவடைக்கு பிறகு உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படும்போது போக்குவரத்து செலவு குறைகிறது. அதனால் விலைமலிவாக கிடைக்கும். உள்ளூரில் விளையும் உணவுப்பொருட்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்கு உகந்ததாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக அமையும். அனைத்து வயதினரும் சாப்பிடு வதற்கு உகந்ததாகவும் இருக்கும். சிட்ரஸ், வைட்டமின் சி அதிகம் கொண்ட உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கோடை காலத்தில் போதுமான அளவு உட்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டும்.

    • முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது.
    • சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முட்டைகோஸ் உதவியாக இருக்கும்.

    நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..!

    முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

    உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

    இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

    • நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
    • ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முன்கள பணியாளர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. இது உடலில் கொரோனா நோய்க்கு எதிரான ஆற்றலை பெருக்குகிறது.

    அதே நேரத்தில் நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதுவும் இயற்கையான தடுப்பூசி போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    புரதங்கள்: இது ஆன்டிபாடி பண்புகளை கொண்டது. நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தக்கூடியது. பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் அதிகளவு உள்ளடங்கி இருக்கிறது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் தரமான புரதங்கள் காணப்படுகின்றன.

    வைட்டமின் ஏ: இந்த சத்து நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் செல்களை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பால், முட்டை, கேரட், குடைமிளகாய், ஆரஞ்சு, தக்காளி மற்றும் அடர் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: பாக்டீரியாவை அழிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியது. நொய்த்தொற்றுகளால் ஏற்படும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. மீன்,மீன் எண்ணெய், ஆளி விதை, ஆளி விதை எண்ணெய், அக்ரூட், சோயா எண்ணெய், எள், பாதாம் போன்றவற்றில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

    வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின்களுள் இது முக்கியமானது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைரஸ் உடலுக்குள் நுழைவதை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், பசலை கீரை, அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படும்.

    துத்தநாகம்: உடலில் துத்தநாகம் குறைந்தால் நோய் எதிர்ப்பு செல் களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். எள், பருப்பு வகைகளில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது.

    புரோபயாடிக்குகள்: புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை துரிதப்படுத்தலாம். சில வகை நோய்த்தொற்று களின் அபாயத்தையும் குறைக்கலாம். தயிர், பாலாடைக்கட்டியில் புரோபயாடிக் அதிகம் காணப்படுகிறது.

    • உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
    • எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

    உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல் போன்ற குறைபாடுகள் வரலாம். இவைகளில் இருந்து தப்பிக்க, இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

    1. பேரீச்சம்பழம்

    பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    2. மாதுளை

    மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    3. அத்திப்பழம்

    உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது. அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

    4. கொய்யாப்பழம்

    பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம். நமது ஊர் பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யாப்பழம். இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் காயாக இருக்கும் கொய்யாவிற்கு, ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் உண்டு.

    5. உலர்திராட்சை

    உலர்திராட்சை மற்றும் இதர பழ வகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச் சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சையினை உட்கொண்டு வாருங்கள்.

    6. ஆப்ரிகாட்

    ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    7. மாம்பழம்

    முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம். இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உண்டு வந்தால் ரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் சரும அழகினை மேம்படுத்த உதவும்.

    8. தர்பூசணி பழம்

    தர்பூசணி பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக் கின்றது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் இளமையுடன் காட்சி அளிக்கலாம்.

    இரும்புச் சத்தின் அவசியம்

    எலும்புகள் வலுவாக இருக்க, இரும்புச் சத்து அவசியம். உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

    ×