என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நோபல் பரிசு"
- கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி முரடோவுக்கு வழங்கப்பட்டது.
- உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுத்தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கியுள்ளார்.
இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர். இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பணியில் கேரள மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். தங்கள் படகுகள் மூலம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு, வெள்ளத்தில் தத்தளித்து வந்த மக்களை காப்பாற்றினர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கேரள மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர், நார்வே நோபல் குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘கேரள மீனவர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளைக் கொண்டு பல மக்களை போராடி காப்பாற்றினர். இதனால் ஏராளமான படகுகளும் சேதமடைந்தன.
அவர்கள் தங்கள் படகுகள் மட்டுமின்றி, மற்ற ஊர்களில் இருந்தும் படகுகள் ஏற்பாடு செய்து கடல் வழியே கொண்டு வந்து தொடர்ந்து நடக்கும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றனர். நாடெங்கிலும் உள்ள மீனவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பின்தங்கியுள்ளனர். கேரள மீனவர்கள் இதில் விதிவிலக்கு அல்ல. இதற்கிடையில் வெள்ளப்பெருக்கின் போது அவர்களின் இந்த தன்னலமற்ற சேவை சிறந்த கடல் வீரர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றது.
இதையடுத்து புகைப்படம் ஒன்றில், மீனவர் ஒருவர் வெள்ளத்தில் தத்தளித்த வயதானவரை காப்பாற்ற, சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் மண்டியிட்டு அவரை முதுகில் சுமந்துகொண்டு வந்து பாதுகாப்பாக தன் படகில் ஏற்றியது நெகிழச்செய்தது. இப்புகைப்படம் மீனவர்களின் தூய்மையான உள்ளத்தினை பிரதிபலிக்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. #ShashiTharoor #NobelpriceRecommendation
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.
காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். காங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபையில் பேசி உலக நாடுகளின் கவணத்தை ஈர்த்தார்.
பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. #NobelPrize #NobelPrizeForPeace
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்துக்கு உதவும் வகையில் பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் கண்டுபிடிப்புக்களுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForChemistry
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்துக்கு உதவும் வகையில் பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் கண்டுபிடிப்புக்களுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForChemistry
சமீபகாலங்களில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும் சிரிக்கவைப்பதாகவும், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்? என சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது. அந்த வகையில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருபவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப்.
பாஜகவைச் சேர்ந்த இவரது பிரசித்தி பெற்ற பேச்சுகளில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது, ராமாயண காலத்திலேயே இன்டர்நெட் வசதி, செயற்கைக் கோள் போன்றவை இருந்தது போன்றவையாகும்.
இந்நிலையில், தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்தவர் ரவீந்திரநாத் தாகூர் என கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பேசிய திரிபுராவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ்புர்மான், முதல்வரின் இந்த கருத்து அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
‘1919-ம் ஆண்டில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் போராட்டத்தின் போது, தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருமகன் பட்டத்தை நிராகரித்ததாகவும், அதனால், எனது தாத்தா மன அமைதியின்றி இருந்ததாகவும் அவரது டைரியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கருத்து முட்டாள்தனமாக உள்ளது’ என்றும் தெரிவித்தார்.
மேலும், முதல்வரின் கருத்துக்கு திரிபுராவின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிராஜித் சின்ஹா கூறுகையில், ’முதல்வரின் இதுபோன்ற கருத்துக்களால் வெட்கப்படவேண்டியிருக்கிறது’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்