search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் விதைப்பு"

    • பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது.
    • மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்புத் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது:-

    பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லை நாயகம் முதலிய நெல் விதைகள் விதைப்பு செய்யப்பட்டது.மாப்பிள்ளை சம்பா, தில்லை நாயகம் 150 நாட்கள், காட்டுயானம் 180 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். தில்லை நாயகம் சென்ற ஆண்டு மீட்டெடுத்த உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமாகும். இது சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் புதிதாக விதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பாரம்பரிய நெல் ரகங்களும் அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் உடையவை. நன்கு வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை அருகே விவசாயிகள் பாரம்பரியமிக்க நெல் விதைத்தனர்.
    • நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, கூடுதல் உரச்செலவுகள் இலருக்காது என விவசாயி ஒருவர் கூறினார்.

    சிவகங்கை

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்யப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் இறைவழிபாட்டுடன் கருப்பு கவுனி நெல் விதை நடவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து இயற்கை விவசாயி பாலகார்த்திகேயன் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் உணவுத்தேவைகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளோடு பல்வேறு விதமான பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றோம்.

    ஆடிப்பெருக்கன்று நமது பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்துள்ளோம். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை நெல் தேவைப்படும். மற்ற நெல் ரகங்களுக்கு மத்தியில் கருப்பு கவுனி நெல்விதை 3 கிலோ போதுமானதாகும்.

    அதிக மழைப்பொழிவை யும், குறைந்த நீர்ப்பிடி ப்பினையும் தாங்கி வளரக்கூடிய நெல்ரகம் இதுவாகும். நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, களை அகற்ற, கூடுதல் உரச்செ லவுகள் இல்லாத எளிய விவசாயத்தில் அதிக விளைச்சலை தருகின்றது. இயற்கை முறையில் விளைவிக்க கூடிய இந்த ரகம் நார்ச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகளும் கூடுதலாக இருப்பதால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சத்தான உணவுப்பொருளாக பயன்படுகிறது.

    இந்த நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக உயரத்தில் நெற்கதிர்கள் வளரும் தன்மையுடைய ரகமாக இது இருப்பதால் நமது கால்நடைகளுக்கான தீவனச்செலவினையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.

    நமது முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய விவசாய முறைகளையும் பயிர்களையும் மறந்து விடாமல் வருகின்ற தலை முறைகளுக்கு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் விவசாயப்பண்ணையின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெட்டுகிளிகள் கோடை காலங்களில் பயிர் இல்லாததால் உணவுக்காக வரப்புகளிலும் மற்றும் வயல் ஓரங்களிலும் உள்ள கலைகள் மற்றும் புதர்களில் தங்கியிருக்கும்.
    • பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் மருந்துகள் 400 மி.லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது இவ்வருடம் சுமார் 12500 ஏக்கரில் குறுவை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்க ளில் ஆற்று நீரைப் பாய்ச்சி நெல் முளைத்து விடுகிறது இந்நிலையில் முளைத்து வரும்இளம் குருத்துக்களை வெட்டுக்கிளிகள்சேதப்படு த்தியதாக விவசாயி களிடமிருந்து தகவல் கிடைத்ததால் உடனடியாக வேளாண்மைத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தெரிவித்ததன் அடிப்ப டையில் நிலையத்தின் தலைவர் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள திருவலஞ்சுழி விளக்குடி மற்றும் கிரக்களூர் கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்

    இந்த ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உடன் இருந்தார் வெட்டுக்கிளியின் தாக்குதல் தென்படுகிறது வெட்டு கிளிகள் கோடை காலங்களில் பயிர் இல்லா ததால் உணவுக்காக அவைகள் வரப்புகளிலும் மற்றும் வயல் ஒரங்களிலும் உள்ள கலைகள் மற்றும் புதர்களில் தங்கியிருந்து சரியான காலத்திற்காக காத்திருக்கும் தற்சமயம் நேரடி தெளிப்பு செய்யப்பட்ட பயிர்கள் முளைத்து வெளிவரும் தருணத்தில் இளம் குருத்துகளை சேத படுத்துகிறது

    இதனால் விவசாயிகள் அச்சம் கொள்ளத்தேவை யில்லை வயலில்விளக்குப் பொறிகள் வைத்துகண்கா ணிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்கா ணிக்க முடியும்

    இவைகளின் மூலம் பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்க முடியும் விவசாயிகள் பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை 400 மி.லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் வயல் ஓரங்களிலும் வரப்புகளிலும் உள்ள புல் பூண்டுகள் புதர்கள் குப்பை குளங்களில் மருந்து அடிக்க வேண்டும் பிரபனோ பாஸ் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 மில்லி இதில் ஏதாவது மருந்தை தெளிக்கவும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×