search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரோடை"

    • கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் வெறும் மழை நீரை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது விளைநிலங்களுக்கு அருகே செல்லும் ஓடை நீரையே பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த ஓடைகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூர்வாரப்படுவது வழக்கம். கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகளை தூர் வாரி, பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் கோத்தகிரி பகுதியில் செல்லும் ஓடைகளை நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் காக்கா சோலை பகுதியில் செல்லும் நீரோடையை தூர்வார சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1500 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரி ஓடை சுத்தம் செய்யப்பட்டது.

    சுமார் 30 அடி அகலமும், சராசரியாக 10 அடி ஆழத்திற்கு ஓடை தூர் வாரும் பணி நேற்று நிறைவடைந்தது.மேலும் ஒரு சில பகுதிகளில் ஓடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
    • இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது.

     பல்லடம் :

    பல்லடத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நவீன மின்மயானம் அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் பச்சாபாளையம் நீரோடை பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 மின்மயானம் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்

    இது குறித்து மாலைமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் பல்லடத்தில் நீரோடை சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரிடம் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு சரியான வழித்தடமும் இல்லை. ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் ஏற்கனவே வெங்கிட்டாபுரம் பகுதியில், ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் சுமார் 4 கோடி ரூபாயில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக இன்னொன்று அமைப்பது மக்கள் வரிப்பணம் வீணாக வழி வகுக்கும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்த அவர் பின்னர் பல்லடம் நகராட்சி 8வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது குறித்து அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார். தபால் அலுவலக வீதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தில் செயல்பட்டு வரும் இ. சேவை மையத்தையும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ்,சமூக ஆர்வலர்கள் ராஜா,மல்லிகா,ராம்குமார், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவகாசம் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.கோர்ட்டு உத்தரவுப்படி கணக்கெடுப்பு நடத்தியதில் மாவட்டத்தில் உள்ள,9 தாலுகாவில் 60 எக்டர் பரப்பிலான நீர்நிலை மற்றும் நீரோடை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    நகர உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு வீடுகள், ஆக்கிரமிப்பு நிலம் ஆகியவற்றை மீட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.

    கலெக்டர்வினீத் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலம், வீடு வாரியாக கணக்கிடப்படவில்லை. வருவாய்த்துறையில் பரப்பளவு மட்டும் கணக்கிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 60 எக்டர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.கடந்த இரண்டு மாதங்களில் 35 எக்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவகாசம் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது என்றார்.

    ×