search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவன அதிபர் கொலை"

    • கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
    • சுமார் 4 வாரங்களில் ரூ.1 லட்சம் பணத்திற்கு இரட்டிப்பு தொகையை சரவணன் வழங்கினார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரி பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47), நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையாளிகள் கொல்லிமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த நாகராஜ், வினோத், ஜோசப், கவின், நவீன், நிஷாந்த் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து சுமார் 4 வாரங்களில் அந்த பணத்திற்கு இரட்டிப்பு தொகையை வழங்கினார். இதை அடுத்து நாகராஜ் ,வினோத் ஆகிய இருவரும் மீண்டும் சரவணனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தனர். ஆனால் அதற்கான இரட்டிப்பு தொகை வழங்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான நாகராஜ், வினோத் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி சரவணன் எங்களிடம் ரூ.10 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து நாங்கள் சரவணனிடம் நைசாக பேசி கொல்லிமலைக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு உள்ள விடுதி அறையில் சரவணனை அடைத்து வைத்து பணத்தை எப்போது திருப்பி தருவாய் என கேட்டோம். அதற்கு அவர் எங்களிடம் கோபமாக பேசினார். இதனால் எங்கள் நண்பர்கள் நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப், கவின் மற்றும் நாமக்கல் சேர்ந்த நவீத், நிஷாந்த், ஆகியோரை வரவழைத்து மிரட்டினோம். அப்போது நடந்த வாக்குவாதத்தில் சரவணனை தாக்கினோம். இதில் பலத்த காயமடைந்த சரவணன் இறந்தார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரணை நடத்தி கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது.
    • பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.

    இந்தநிலையில் பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனர்.

    மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாரேனும் பாலசுப்பிரமணியனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியன் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யார் யாருடன் பழக்கம் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.   

    ×