என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால் கொன்றோம்- நிதி நிறுவன அதிபர் கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
- கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
- சுமார் 4 வாரங்களில் ரூ.1 லட்சம் பணத்திற்கு இரட்டிப்பு தொகையை சரவணன் வழங்கினார்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரி பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47), நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையாளிகள் கொல்லிமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த நாகராஜ், வினோத், ஜோசப், கவின், நவீன், நிஷாந்த் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சரவணன், கைதான நாகராஜ் வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து சுமார் 4 வாரங்களில் அந்த பணத்திற்கு இரட்டிப்பு தொகையை வழங்கினார். இதை அடுத்து நாகராஜ் ,வினோத் ஆகிய இருவரும் மீண்டும் சரவணனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தனர். ஆனால் அதற்கான இரட்டிப்பு தொகை வழங்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான நாகராஜ், வினோத் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி சரவணன் எங்களிடம் ரூ.10 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து நாங்கள் சரவணனிடம் நைசாக பேசி கொல்லிமலைக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு உள்ள விடுதி அறையில் சரவணனை அடைத்து வைத்து பணத்தை எப்போது திருப்பி தருவாய் என கேட்டோம். அதற்கு அவர் எங்களிடம் கோபமாக பேசினார். இதனால் எங்கள் நண்பர்கள் நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப், கவின் மற்றும் நாமக்கல் சேர்ந்த நவீத், நிஷாந்த், ஆகியோரை வரவழைத்து மிரட்டினோம். அப்போது நடந்த வாக்குவாதத்தில் சரவணனை தாக்கினோம். இதில் பலத்த காயமடைந்த சரவணன் இறந்தார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரணை நடத்தி கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்