search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடகம்"

    • 25-ந்தேதி இரவு வள்ளி திருமணம், நாடகமும் நடைபெறவுள்ளது.
    • விழாவில் ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்ச னையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.

    இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாடகம் நடைபெற்றது, நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு களித்தனர்.

    21-ந்தேதி ஹரிச்சந்திரா முதல்பாகமும், 22ந்தேதி ஹரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும்,24 ந்தேதி லீலா விலாசம் எனும் நாடகமும், 25 ந்தேதி இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறவுள்ளது.

    தினசரி பல்லேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது.

    நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.
    • இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    குமாரபாளையம்:

    கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

    கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.
    • தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கூப்புளிக்காடு கிராமத்தில் கேட்டவர்களுக்கு கேட்டவரம் தரும் ரதிமன்மத சுவாமி கோவிலில் காமன் பண்டிகை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு அணிந்து 13 நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.

    காலை வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வடை, அப்பளம், பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.

    மாலையில் பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவிலிருந்து பூத்தட்டு ஊர்வலம் கூப்புளிக்காடு ரதி மன்மதன் கோவிலை வந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

    அதிகாலை ரதிமன்மதன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது.

    இதையடுத்து காமன் தகனம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கூப்புளிக்காடு கிராமத்தினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணர்வு நடந்தது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன் தலைமையில் தொடங்கிய இந்த தெருமுனை நாடக பிரச்சாரம், பேருந்து நிலையம், அம்பேத்கர் நகர், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலை, சந்தை திடல் ஆகிய பகுதிகளில், விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் கிராமிய பாடல்களோடு நடைபெற்றது.

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் பொதுமக்களிடம் ஆசிரியைகள் பிரசாரம் செய்தனர்.இந்த விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசாரத்தில் வட்டார கல்வி அலுவலர் வித்யா, அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைகள் சத்தியக்குமாரி, ஷபிராபானு, அர்ஜுனன், ரேணுகாதேவி, ராமச்சந்திரன் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தெருமுனை நாடக பிரசாரத்தின் போது, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 5 குழந்தைகள் குடியிருப்பு பகுதியிலேயே சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×