search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி  தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணர்வு
    X

    விழிப்புணர்வு பிரசாரம் செய்த கலைக்குழுவினர்.

    அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணர்வு

    அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணர்வு நடந்தது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன் தலைமையில் தொடங்கிய இந்த தெருமுனை நாடக பிரச்சாரம், பேருந்து நிலையம், அம்பேத்கர் நகர், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலை, சந்தை திடல் ஆகிய பகுதிகளில், விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் கிராமிய பாடல்களோடு நடைபெற்றது.

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் பொதுமக்களிடம் ஆசிரியைகள் பிரசாரம் செய்தனர்.இந்த விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசாரத்தில் வட்டார கல்வி அலுவலர் வித்யா, அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைகள் சத்தியக்குமாரி, ஷபிராபானு, அர்ஜுனன், ரேணுகாதேவி, ராமச்சந்திரன் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தெருமுனை நாடக பிரசாரத்தின் போது, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 5 குழந்தைகள் குடியிருப்பு பகுதியிலேயே சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×