search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லாசிரியர்"

    • நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.
    • கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், தேவ பாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, வடதொ ரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வில்வபதி ஆகியோரும், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, நைனாக்கு ப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகிய ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் சந்திரா என 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி, வெள்ளிப் பதக்கம் அணிவித்து தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கி கவு ரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, இவ்விருது பெற்ற கள்ள க்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்கு மாரை நேரில் சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண ப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஆரோக்கியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜோதிமணி, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
    • தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலை பள்ளியில் 33 ஆண்டு கால பணியில் உடற்கல்வி ஆசிரியராகவும், தேசிய மாணவர் படை அதிகாரியாகவும், உடற்கல்வி இயக்குநராகவும், நாட்டு நல பணித்திட்ட அலுவலராகவும், பள்ளியின் உதவி தலைமையா சிரியராகவும் பணியாற்றி வருபவரும், சென்ற ஆண்டின் தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர். ராதாகி ருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்ற எஸ்.முரளிதரனுக்கு இந்திய அரசின் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய உடற்கல்வி அமைப்பு சார்பில் சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கான விருது புது டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.

    இவ்விருதினை அவ் வமைப்பின் அகில இந்திய நிறுவன தலைவர் டாக்டர்.பியுஷ் ஜெயின் , தமிழ்நாடு பெபி அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் சபரி கணேஷ் முன்னிலையில், துரோணாச்சாரியர் விருது பெற்ற சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளருமான டாக்டர். ஏ.கே.பன்சல் தேசிய விருதினை சீர்காழி எஸ்.முரளிதரனுக்கு வழங்கினார்.

    இவ்விருதினை பெற்ற முரளிதரனை ,பள்ளி முன்னாள் செயலர் பாலசுப்ரமணியம், எஸ்.இராமகிருஷ்ணன் பள்ளி செயலர் சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கபாலி, பள்ளி பழைய மாணவர் சங்க செயலர் முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி,பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் துளசி ரங்கன்,

    சீனிவாசன் ,பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்தி வேல், ஹரிஹரன், ராகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அலுவலர்கள் பாராட்டினர்.

    • கீழக்கரையில் நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு அளிக்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் முத்துக்குமார் மாநில நல்லாசிரியர் விருது பெற்றார்.

    இதையடுத்து பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னிலையில் அனைத்து கவுன்சிலர்கள் நல்லாசிரியர் முத்துக்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லாசிரியர் முத்துகுமார், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வி அலுவலர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    ×