search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலச்சங்கம்"

    • சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் துரைசாமி, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை உயிர் வேதியியல் துறை தலைவர் பமீலா கிறிஸ்துதாஸ்

    கலந்து கொண்டு ஆய்வக துறையில் நவீன முறைகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    இதில், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

    பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்களால், சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படும் நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

    இந்த கருத்தரங்கில் சங்க இணை செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கலா, சேலம் மாவட்ட தலைவர் நிஷார் அகமது, செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்ட ஆலோசகர் வக்கீல் வி.கந்தசரவணகுமார் தலைமையில், நிறுவனத் தலைவர் எஸ்.கண்ணன், நகரச் செயலாளர் எல்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த

    ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளதால், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் கிடைக்காத சூழ்நிலையில் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் கட்டட கலைஞர்கள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    ×