என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare association"

    • கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்ட ஆலோசகர் வக்கீல் வி.கந்தசரவணகுமார் தலைமையில், நிறுவனத் தலைவர் எஸ்.கண்ணன், நகரச் செயலாளர் எல்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த

    ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளதால், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் கிடைக்காத சூழ்நிலையில் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் கட்டட கலைஞர்கள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    • ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் (லீக்) தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரரும் தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

    இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பெருமாள், ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குப்பன், மோகன், சிசுபாலன், குமரன், பழனி, கோதண்டராமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பலர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனின் அக்கறை கொள்ள வேண்டும்.

    அவர்களது கஷ்டங்களை புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    ×