search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல உதவி"

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆராய்ச்சி நடப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
    • நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

    ஜோலார்பேட்டை:

    க்ஷஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்கத்தில் ஏலகிரி மலை மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.

    அமைச்சர் எ.வ.வேலு நல உதவி திட்டங்கள் வழங்கினார் அவர் பேசியதாவது:-

    ஏலகிரி மலையானது 1000 ஆண்டுகள் பழைமையானது. இப்பகுதியில் வாழ்ந்த ஐந்நூற்றவர் வணிகக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்து வந்தனர். கி.பி.10 நூற்றாண்டில், ஐந்நூற்றவன் மலையில் எள் உள்ளிட்ட எண்ணெய் தரக்கூடிய வித்துக்கள் எண்ணெய் எடுப்பதற்கான "கல்செக்கு" பயன்படுத்தியதற்கான சான்றுகள் கல்வெட்டில் உள்ளது.

    முனைவர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக்குழு, வரலாற்று தடையங்களான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், நடுகற்கள் போன்ற தடயங்களை சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற ஒரு துறையை உருவாக்கி அத்துறை மூலம் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தனி கவனம் செலுத்தி தீர்க்கப்படக் கூடிய கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றி தந்துள்ளார்.

    • மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளியில் இன்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரம் ,நோய் தடுப்பு துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.

    பார்வையிட்ட பிறகு அந்தந்த துறைகளில் மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி தீயணைப்புத் துறையின் சார்பாக தீ விபத்து ஏற்படும்போது தற்காத்துக் கொள்ள செயல் விளக்க செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி யூனியன் சேர்மன் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களைுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குட்பட்ட உடுமலை வனசரகம் பொறுப்பார் குடில் மலைவாழ் மக்களை சந்தித்து,கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட நக்சல் சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் சார்பாக அப்பகுதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும்,மரக்கன்றுகளை நிறுவனர் உடுமலைடாக்டர் எஸ்.ஏ.ஐ. நெல்சன் வழங்கினார் .உறுப்பினர்கள் சிவலிங்கம்,ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.  

    ×