search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நற்கருணை"

    மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று 9-வது நாளில் நவநாள் திருப்பலி, பங்குதந்தைமரிய ஜோசப் ஜெரால்டு முன்னிலையில் தஞ்சை ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் கூட்டு திருப்பலி கூட்டு பாடல் திருப்பலியும், அறந்தாங்கி பங்குதந்தை பிரிட்டோ திவ்விய நற்கருணை ஆராதனையும் நடத்தினர். 

    மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய நாதர், செபஸ்தியார், மாதா, புனிதவனத்து அந்தோணியார் மற்றும் புனித பதுவை அந்தோணியார் உள்ளிட்ட சொரூபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை மரியஜோசப் ஜெரால்டு தலைமையில் பங்கு மன்றம், திருவிழா ஒருங்கிணைப்பு குழு, பங்கு மக்கள், இயேசுவின் கரங்கள் இயக்கத்தினர், திரு இருதய சகோதரர்கள், தூய இருதய மரிய அன்னை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    கேரளாவில் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் சார்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் ரொட்டி மற்றும் திராட்சை ரசம் ஆகியவை கொண்ட நற்கருணையானது நாக்கில் கொடுப்பதற்கு பதிலாக அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதோடு ஞானஸ்நானங்கள், கிரகபிரவேசங்கள், திருமணங்கள் மற்றும் ஜெப கூட்டங்கள் ஆகியவற்றையும் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள், பொது கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இறை நம்பிக்கையாளர்கள் நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவும், மாநில அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார். #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese
    ×