search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்பயிற்சி"

    • அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை பணிமனையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் தொழிற்ப யிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், சமூக பொருளா தார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், விருதுநகர் அரசினர் தொ ழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.

    பின்னர், இந்த ஆண்டி ற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கைக்கு அனுமதி க்கப்பட்ட தொழிற்பி ரிவு பயிற்சி யாளர்க ளுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, தொழிற்ப யிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் மே கநாதரெட்டி மரக்க ன்றினை நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர்(திருநெல்வேலி) செல்வக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் பிருந்தாவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ரூ .72 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்அரவிந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்பயனாக புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ .72 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்என்றார் .

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்பிரமிளா, மண்டல தலை வர்கள் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், வக்கீ ல்சதாசிவம், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.
    • இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வெளியிட்ட அறிவிப்பில் மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ண ப்பங்கள் விநியோகம் 18.07.2022 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பம் பெற கடைசி நாள் 28.7.2022 ஆகும் விண்ணப்பங்களை முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுக்கா அலவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர் அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க 1.08.2022 (மாலை 05.30 மணி) கடைசி நாள் ஆகும்.இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டபடிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • திருச்சுழியில் தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி அசோகன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    திருச்சுழி சட்டமன்ற தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். உயர்கல்வியில் இந்த பகுதி முன்னேறுவதற்கு இந்த கல்லூரி உறுதுணையாக இருக்கும்.

    தற்போது 230 இளங்கலை படிப்பிற்கு கிட்டத்தட்ட 1139 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதை வைத்தே இந்த பகுதியில் உயர்கல்விக்கு தேவை அதிகம் என்பதை உணர முடிகிறது. அடுத்தாண்டு இந்த பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் மணிமாறன், முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி யூனியன் தலைவர் சுப்பாராஜ்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×