search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்ப உற்சவம்"

    • நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 7-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு தொடங்கி விடிய, விடிய தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுமார் 20 சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, தேர்பேட்டை வீதிகளில் மேள, தாள வாத்தியத்துடன் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியை வைத்து, மேள, வாத்தியத்துடன் குளத்தை சுற்றி 3 முறை தெப்பம் சென்றது. அப்போது பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எழுப்பினர். மேலும் பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு . தெப்ப உற்சவத்தை தரிசித்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் மாசிமக விழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு மாசிமக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவர் அங்காள பரமேசுவரிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தார்.

    அதன்பின் கோவிலை வந்தடைந்த அம்மன் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பம் 3 முறை வலம் வந்தது. திரளான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது.
    • நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார்.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படுவது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு விழா இன்று (6-ந்தேதி) மாலை 6.20 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கு கிறது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளு கிறார்கள். அங்கு பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் 7-ந் தேதி நடக்கிறது.
    • மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கை கரைபட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்வார். வழி நெடுகிலும் நின்ற சேவை சாதிக்கிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவ இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து அன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. ெதப்ப உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்கா ணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • 3 நாட்கள் நடக்கிறது
    • கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நர சிம்மர் கோவிலில் தை தெப்ப உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    சோளிங்கரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோ றும் தை தெப்ப உற்சவம் மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் 3 நாட்களுக்கு நடைபெறு வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை தெப்ப உற்சவம் நாளைதொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    முதல் நாள் தெப்ப உற்சவத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுக்கள் வலம் வந்து அருள்பாலிக்கிறார். 2-ம் நாளில் 5 சுற்றுக்களும், 3ம் நாளில் 7 சுற்றுக்களும் தெப்பத்தில் வலம் வந்து சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை கோவில் உதவி ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார்.

    • வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.

    உடுமலை :

    உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம், வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் ஆண்கள் பாட்டுப்பாடி கோவிலை சுற்றி வந்தார்கள்.

    கோவிலில் நவநீதகிருஷ்ணன் பெருமாளுக்கு பால், தயிர், நெய், இளநீர் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.  

    • திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்ெகாம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பிறகு காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் கொடியேற்றமும், சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பின் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 7-ந்தேதி கருட வாகனத்திலும், 8-ந்தேதி சேஷவாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    10-ந்தேதி ஆடிபிரமோற்சவத்தை முன்னிட்டு சவுந்தரராஜபெருமாள், சவுந்திரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இரவு மணக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதன்பின் இரவில் அவரோகணம் நிகழ்ச்சியும், நேற்று காலை தீர்த்தவாரியும் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு பூஜைகளும், மகாதீபாரதனையும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து நேற்று மாலை சிவசுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மேள,தாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழாவில் தருமபுரி தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சாமி தெப்பக்குளத்திற்குள் 7 முறை வலம் வந்தார். இதையடுத்து சாமி தெப்பக்குளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளும், மகாதீபாரதனையும் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தெப்ப உற்சவம் நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    ×