search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர் கோவில்"

    • சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அலங்காநல்லூர்:

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.10 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 'முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தர ராஜபெருமாள் அருள்பாலித்தார். திருஅத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளும் நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சுந்தரராஜ பெருமாளை வணங்கினர்.

    இதைப்போலவே இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்தி ருந்தனர்.

    மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் கூடலழகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    • கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
    • பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளதை யொட்டி யாகசாலை பூஜைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்ட பத்தில் இன்று காலை முதல் நடைபெற்றது.

    அழகர்கோவில் கள்ள ழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜையில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. எஜமானர் அழைப்பு, வாஸ்து சாந்தி, புன்யாக வாசனம், கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி பூர்ணாகுதி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ராஜகோபுரம் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பாலாலய பூஜையுடன் ராஜகோபுரம் வண்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் 6.25 அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் உடையது. தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் காட்சி யளிக்கிறது.

    • மழை வேண்டி கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் செய்தனர்.
    • மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18-ஐ முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து பாரம் பரிய முறையில் மாட்டு வண்டிகளை பூட்டி வரிசை யாக ஒன்றன் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பி னர்களுடன் அழகர்கோவி லுக்கு சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்

    அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத் தில் புனித நீராடிய பின்னர் கள்ளழகர், ராக்காயி அம்மன், 18-ம் படி கருப்ப சாமி தெய்வங்களை வணங்கி விட்டு தாங்கள் நேர்த்தி கடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது விரதத்தினை முடித்து சொந்த ஊர் திரும்புவது இவர்களது வழக்கமாக உள்ளது.

    விவசாயம் செழிக்க, மழை பொழிய வலியுறுத்தி யும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    • தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
    • மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு அடுத்தபடியாக 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி திருத்தேரில் அலங்கார திரைச்சீலை கட்டுதல், தேர்ச்சக்கரம் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பித்தல், மரக்குதிரைகள் பொருத்துதல், தேர் முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து வடங்கள் பொருத்தப்பட்டன. காலை 6.30 மணிக்கு மேல் பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் உள்ளிட்டோர் அருள் வந்து சாமியாடியபடி வந்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை வாசல்களை கடந்து 4 ரதவீதிகளிலும் அசைந்தாடி வந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதேபோல் தேரோட்டத்தை வயதான பக்தர்கள் மற்றும் பெண்கள் சிரமமின்றி காணும் வகையில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தேரோட்ட விழா முடிந்து இன்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை (2-ந் தேதி, புதன்கிழமை) புஷ்ப சப்பரம், 3-ந்தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி வரை மட்டும் மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் பஸ்கள் வலையபட்டி வழியாக மரக்காயர்புரம் சென்று பின்பு மேலூர் செல்லும் வகையிலும், மேலூரில் இருந்து அழகர் கோவில் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மரக்காயர்புரம் சென்று நாயக்கன் பட்டி வழியாகவும், மதுரைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    • கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் நாளை நடக்கிறது.
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருத்தேர் புதிய வண்ண அலங்கார திரைச்சீலை அமைத்தல், திருத்தேர் சக்கரங்கள், குதிரை உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதல் பிரேக் ஆகியவை புதுப்பித் தல் பணி மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது. மேலும் தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் துணை ஆணையர் இராமசாமி மற்றும் உள்துறை அலு வலர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணி களை துரிதப்படுத்தியும், பணியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கியும் வருகின்ற னர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.



    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள். 

     அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப் பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி -பூமிதேவி, சமேத கள்ளழகர் என்கிற சுந்தர ராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நாளை (25-ந்தேதி) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அன்னம், அனுமார், கருடன், தங்க பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரமும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடை பெறும். ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மேல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந்தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது.
    • நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார்.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படுவது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு விழா இன்று (6-ந்தேதி) மாலை 6.20 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கு கிறது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளு கிறார்கள். அங்கு பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் 7-ந் தேதி நடக்கிறது.
    • மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கை கரைபட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்வார். வழி நெடுகிலும் நின்ற சேவை சாதிக்கிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவ இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து அன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. ெதப்ப உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்கா ணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆடி திருவிழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 12-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று (4-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். நாளை மறுநாள் (6-தேதி) வழக்கம் போல் காலை நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும், 7-ந் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 8-ந்தேதி காலையில் 6.45 மணிக்கு மேல 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று தங்க பல்லக்கில் எழுந்தருளிகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 9-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    10-ந் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 11-ந் தேதி இரவு தங்ககுதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளிகிறார். தொடர்ந்து 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    அன்று இரவு பூப்பல்லாக்கும், 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×