search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்ப உற்சவம்"

    • நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.

    தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.

    மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.

    • மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
    • உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.

    கடலூர்:

    மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு கடலூா் முது நகா் மீன்பிடி துறை முகத்தில் இரவு நேர மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். இதில், மீனவா் கிராமங்களில் பல்வேறு கோவில்களில் இருந்தும் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.

    மின்விளக் குகள், பூக்களால் படகுகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் கடலில் உற்சவா்கள் வலம் வருவது வழக்கம். இதன்படி, தைக்கால் தோணித்துறையில் கருப்ப முத்துமாரியம்மன் படகில் எழுந்தருளி உப்பனாற்றில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல மீன்பிடி துறைமுகத்தில் தைக்கால் தோணித்துறை கெங்கை அம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளி ரியம்மன், சலங்கைக்காரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை முத்துமாரியம்மன், அக்கரைக்கோரி கண்ணனூா் மாரியம்மன் ஆகிய உற்சவா்கள் படகுகளில் எழுந்தருளி வலம் வந்தனா்.

    பின்னா் மீன்பிடி துறை முகத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதனால், துறைமுகம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மேள தாளங்கள் முழங்கிட வாண வேடிக்கையுடன் சாமிகள் படகுகளில் கடற்கரையோரமாக உலாவந்து துறை முகம் மீன்பிடித்தளத்தில் நிறுத்தப்பட்டது.

    விழா மிகவும் ரம்மியமாக இருந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நடை பெற்ற இந்த மாசி மக திருவிழாவில் பல்லாயி ரக்கணக்கானோர் குவிந்து விடிய விடிய சுவாமி தரிசனம்

    செய்தனர்.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

    8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா.
    • பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகம் பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.

    இதனையடுத்து 6-ம் நாள் விழாவாக கடந்த 20-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக, அதிகாலை யில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன. இதை யடுத்து, அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தோ்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.

    தொடா்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் காலை 5:45 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

    முதலில் விநாயகா் தோ் புறப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மற்ற 4 திருத்தோ்களும் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம் தீா்த்தவாரி மணிமுக்தா ஆற்றில் நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவமும், திங்கட்கிழமை சண்டிகேஸ்வரா் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

     தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

     தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

     நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும்.
    • தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ம் தேதி வள்ளிதெய்வானை முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய

    நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 25ம் தேதி நடைபெற்றது. மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    27-ம் தேதி இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளினார். 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால் தெய்வானை கோபித்துக்கொண்டு செல்ல தூதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோவில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெப்பகுள மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.

    • திருவண்ணாமலையில் இன்று இரவு நடக்கிறது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் தெப்ப உற்சவம் அய்யங்கு ளத்தில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் அண்ணாமலை உச்சியில் நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று இரவு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முதல் நாள் தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

    இ்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், ஒப்பந்ததாரர் குட்டி புகழேந்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பச்சையம்மன் முத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 2-ம் நாள் தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மனும், நாளை நடைபெறும் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுப்பிரமணியரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவர்.

    தெப்ப உற்சவம் காண வந்த பக்தர்களுக்கு தூய்மை அருணை அமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.
    • இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி சாலையில், மிக வும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோவில் உள்ளது.

    இங்கு பவித்ரோத்சவ விழா, கடந்த புதன்கிழமை, 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை வரை அங்குரார்ப்பணம், புண்யாஹவாசனம், துவார பூஜை, பவித்ர பிரதிஷ்டை மற்றும் கும்ப மண்டல ஆராதனையும் சிறப்பு ஹோமங்களும் நடை பெற்றது. தொடர்ந்து, வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக, சம்வத் சரோத்சவ நிகழ்ச்சியும், இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் கேசவன் தலைமையில், அர்ச்சகர்கள் ரகுராமன், சுதர்சன் மற்றும் யோகேஷ் ஆகியோர் சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    இதில், விழாக் குழு தலை வரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத், மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட கமிட்டி நிர்வா கிகள்,கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்திவேல், கோவில் பணி யாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவிழாவின் 10-வது நாள் அன்று சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து சுவாமி-அம்பாள் தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து கோவில் தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    • திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த

    24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.

    5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    • சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 16 நாட்கள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தேரோட்டம் நடந்தது. கொடி இறக்கி கடைசி திருவிழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாக தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.

    மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மாரியம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    ×