

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் தெப்ப உற்சவம் அய்யங்கு ளத்தில் நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் அண்ணாமலை உச்சியில் நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முதல் நாள் தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இ்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், ஒப்பந்ததாரர் குட்டி புகழேந்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பச்சையம்மன் முத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு 2-ம் நாள் தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மனும், நாளை நடைபெறும் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுப்பிரமணியரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவர்.
தெப்ப உற்சவம் காண வந்த பக்தர்களுக்கு தூய்மை அருணை அமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.