search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை"

    • கிருஷ்ணராயபுரத்தில் தென்னை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது
    • மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு பணி செய்யப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.


    • ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும்.
    • கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா

    மணியனூர், கந்தம்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிபாளையம், சோழசிரா மணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், திகவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், இருக்கூர், கொந்தளம், கோப்பணம் பாளையம், வெங்கரை, பாண்ட மங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், பரமத்தி, மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மர சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும். அப்போது விவசாயிகள் தென்னை மர குத்தகைக்காரர்களுக்கும், தேங்காய் மண்டி உரிமையாளர்களுக்கும் மர எண்ணிக்கையில் குத்தகைக்கு விடுவது வழக்கம். ஒரு மரத்துக்கு எவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து மொத்தமாக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார்கள்.

    கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து பருவமழை பெய்ததால் தென்னை மரத்தில் காய்கள் அதிக விளைச்சல் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பை மற்றும் வெளிமாநில, வெளி மாவட்டத்திற்கு செல்லும் தேங்காய்கள் விலை குறைந்து விற்பனையாவதால் குத்தகைகாரர்கள் மற்றும் தனியார் தேங்காய் மண்டி வியாபாரிகள் தென்னை மர குத்தகையை விலை குறைத்து விட்டனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். 

    • உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு பின் உயர்ரக தென்னை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இனிப்பு சுவை மற்றும் காய்ப்பு திறன் அதிகம் என்பதால் பல விவசாயிகள் உயர் ரக தென்னை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.

    துவக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக தென்னையிலும் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள் தெளித்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாரம்பரிய நாட்டுத் தென்னை மரங்கள் பூச்சி தாக்குதலை சமாளித்து நிற்கின்றன.ஆனால் உயர் ரக தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து விட்டது. பல்லாண்டு பயிரான தென்னையை வளர்த்த விவசாயிகள், அழிக்கவும் மனமில்லாமல் பராமரிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி விவசாயிகள் இவற்றை வாங்கி ஏமாறுவது தொடர் கதையாக உள்ளது.எனவே அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து உயர் ரகத் தென்னங்கன்று உற்பத்திக்கு மற்றும் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    • 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில் உலக தென்னை தினத்தினை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.இதில், வேளாண் உதவி இயக்குனர் வசந்தா,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ந்தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில், 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தென்னை, வட்டார விவசாயிகளுக்கு வாழ்வாதார பயிராக உள்ளது. நிரந்தர பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் இருப்பிலுள்ள, தென்னை, பருத்தி, பயறு வகை மற்றும் தானிய வகை உரங்கள் , மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிபயறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை விதை இருப்பு குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பேசினார். பொங்கலூர் அறிவியல் மைய பேராசிரியர் கலையரசன், தென்னையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், வருவாய் அதிகரிக்க தென்னந்தோப்புக்குள் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், தென்னையில் ஊடுபயிராக மகா கனி, மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம் என்றார்.

    முன்னாள் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், தென்னை மரத்திற்கு இட வேண்டிய பேரூட்டம், நுண்ணுாட்ட உரங்களின் அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், தென்னந்தோப்புக்குள் பசுந்தாள் உரமாக பயன்படும் தக்கை பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகமாவதோடு களையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.கருத்தரங்கினை முன்னிட்டு அலுவலக வளாகத்தில், தென்னை சார் பொருட்களைக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    • தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள்.
    • தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்நூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. போதிய விலை இல்லாதது, வெள்ளை ஈ, கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

    இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை அடிப்படையில், உர மேலாண்மை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், வேளாண் அலுவலகங்களில் இயற்கை உரங்கள், நுண்Èட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என வேளாண்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள். வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத்தரும்.தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்Èட்டஉரங்களும் மிகவும் அவசியமாகும். ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும்.அதனை இரண்டாகப்பிரித்து, ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இட வேண்டும். பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை அரை கிலோ வீதம், ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும்.தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கக்கூடாது.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம், மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் துார் பாகத்திலிருந்து, 3 அடி துாரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். தென்னை நுண்ணுாட்டம் வைப்பதால், பொக்கைக்காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும்.சிறப்பான பலன் தரும் தென்னை நுண்ணுாட்டத்தை வேளாண் துறை அலுவலகங்களில் வாங்கி, விவசாயிகள் பயனடையலாம்.இயற்கை உரம் கட்டுவதாக வரும், நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மூலம் 1000 டன் அரவைக் கொப்பரை ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிலோவிற்கு ரூ.105 என்ற விலையில் இதுவரை 6500 கிலோ தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 350 விற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    கொப்பரை கொள்முதல் பணி ஜூலை 31-ந்தேதி முடிய உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 96778 44623 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    • தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும்.
    • மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையாகிறது.அதற்கு பதிலாக தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும். காங்கயம் தென்னை வர்த்தக நகராக உள்ளது. தென்னைக்கு இங்கு நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×