search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fertilizer Management"

    • தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
    • கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னை நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் வழிமுறை குறித்து கையேடு வழங்கப்பட்டது.

    மூலனூர்:

    மூலனூரில் வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தென்னையை தாக்கும் நோய்கள், பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உர மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

    தென்னை பராமரிப்பு மற்றும் வழிமுறைகள் குறித்து, வேளாண் பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசியதாவது:-

    தென்னையில் ஏற்படும் கருந்தலை புழுக்கள், கூண்டு புழுக்கள், கரும் பூஞ்சானம், இலை அழுகல், இலையின் ஓரங்களில் கருகி காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதால் மற்றும் இலைகள் உள் நோக்கி வளைதல் போன்ற நோய்களை கண்டறிதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கப்படுகிறது.

    மேலும் தென்னையில் வாடல் நோயின் வகைகளான தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா வாடல் நோய்களுக்கான வேறுபாடுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தென்னை நடவு செய்யும் போது, பெரும்பாலான விவசாயிகள் இரண்டு அடி குழி எடுத்து நடவு செய்கின்றனர். இவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் வேகமாக காற்று வீசும் பொழுது தென்னை சாய்ந்து விழ அதிக வாய்ப்புள்ளது.எனவே 3 அடி குழி தோண்டி, 15 முதல் 30 நாட்களுக்கு பின் தென்னை நடவு செய்ய வேண்டும். குழி தோண்டிய நாளே நடவு செய்தால் மண்ணின் உஷ்ணத்துக்கு தென்னங்கன்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னை நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் வழிமுறை குறித்து கையேடு வழங்கப்பட்டது.

    • தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள்.
    • தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்நூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. போதிய விலை இல்லாதது, வெள்ளை ஈ, கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

    இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை அடிப்படையில், உர மேலாண்மை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், வேளாண் அலுவலகங்களில் இயற்கை உரங்கள், நுண்Èட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என வேளாண்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள். வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத்தரும்.தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்Èட்டஉரங்களும் மிகவும் அவசியமாகும். ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும்.அதனை இரண்டாகப்பிரித்து, ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இட வேண்டும். பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை அரை கிலோ வீதம், ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும்.தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கக்கூடாது.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம், மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் துார் பாகத்திலிருந்து, 3 அடி துாரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். தென்னை நுண்ணுாட்டம் வைப்பதால், பொக்கைக்காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும்.சிறப்பான பலன் தரும் தென்னை நுண்ணுாட்டத்தை வேளாண் துறை அலுவலகங்களில் வாங்கி, விவசாயிகள் பயனடையலாம்.இயற்கை உரம் கட்டுவதாக வரும், நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×