search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி"

    • விபத்து பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
    • அவசர கால பணியாளர்கள், பத்திரிகையாளர்களும் பலியாகினர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப் படையினர் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.

    இதையடுத்து இரு விபத்துக்களிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

    இதில் அவசர கால பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பலியாகினர். காயமடைந்த 29 பேரில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
    அங்காரா :

    சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.

    இதற்கிடையே இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

    அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

    அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக தூதரகத்தில் சோதனை நடத்தி விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளதாகவும், அதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் துருக்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.



    நீண்ட இழுபறிக்கு பின்னர் சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று தூதரகத்துக்கு வந்த சீருடை அணிந்த துருக்கி போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். #SaudiJournalist #JamalKhashoggi
    அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது. #USTurkeyClash
    அங்காரா :

    துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது முறியடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டிய துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் தொடர்பு வைத்திருந்து உளவு வேலை பார்த்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை விடுதலை செய்யக்கோரி அமெரிக்கா பலமுறை கோரிக்கை விடுத்தும் துருக்கி அதை கண்டுகொள்ளாததால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியது.

    இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு வெளியிட்டார்.

    துருக்கி-அமெரிக்கா இடையிலான இந்த மோதல் போக்கால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு டாலருக்கு நிகரான துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. மேலும், இது இந்திய ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.



    இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் சட்ட விரோத கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துருக்கி அதிபர் எர்டோகன் ஊடங்களிடம் இன்று தெரிவித்தார்.

    இது தொடராக அதிபர் எர்டோகன் கூறுகையில், 'துருக்கி  சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றி மட்டுமே செயல்படும். இரட்டை வரிவிதிப்பு போன்ற மிரட்டல்கள் மூலம் எங்களை பணிய வைக்கலாம் என அமெரிக்கா நினைக்க கூடாது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், சட்ட விரோதமாக அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என கூறினார்.

    துருக்கி-அமெரிக்கா இடையே நாளுக்கு நால் வலுத்து வரும் மோதல் இந்தியா உள்பட பிற நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #USTurkeyClash
    ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

    இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப், காரா மற்றும் ஹக்குர்க் பகுதிகளின் வான் பகுதிகளில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
    அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தற்போது பொருளாதார மோதல் நடந்து வரும் நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Turkey #US
    அங்காரா:

    அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

    ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது. இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

    இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது.

    இந்நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரில் இருந்து ஒரு கும்பல் தூதரகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எனினும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் இல்லை. பக்ரீத் பண்டிகைக்காக தூதரகத்திற்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது. #USTurkeyClash
    அங்காரா :

    துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டிய துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு காரணமாக கூறப்படும் துருக்கியின் நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மேலும், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.

    ஆனால், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை விமர்சனம் செய்து தொடர்ந்து ஈரானிடம் இருந்து துருக்கி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்ததற்கு, பழி வாங்கும் செயலாக தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை வித்தித்துள்ளது என துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் தடையினால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு டாலருக்கு நிகரான துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    துருக்கியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் எவ்வித மிரட்டல்களுக்கும் துருக்கி பணிந்து போகாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்களை புறக்கணிப்போம்.

    ஐபோன்களுக்கு பதிலாக சாம்சங் அல்லது துருக்கியின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்தலாம். நாட்டில் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருப்பது உண்மை தான், இருப்பினும் சரிவை சந்தித்துள்ள லிராவின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  #USTurkeyClash
    துருக்கி அதிபர் பதவிக்கான மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். #TurkeyElection #Erdogan
    அங்காரா:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

    அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.



    இந்நிலையில், அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஏ.கே கட்சியின் சார்பில் கடந்த 2014-ல் எர்டோகன் முதன் முறையாக அதிபரானார். எதிர்ப்பலைகள் இல்லை என்பதால் இரண்டாவது முறையாக அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், அதிபர் போட்டியில் உள்ள குடியரசு மக்கள் கட்சியின் முஹாரம் இன்ஸ் கடும் சவால் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

    பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
    ×